ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி வழக்கு!
ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் டி.ஆர்.பி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கில் கணினி ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவது சரியானது அல்ல என்று வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.