பின்லாந்தில் பாடம் கற்கும் அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருபவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். இவர் 7 நாள் பயணமாக பின்லாந்திற்கு சென்றுள்ளார். இவர் அங்குள்ள மழலையர் பள்ளி ஒன்றை பார்வையிட்டு அவர்களின் கல்வி முறை பற்றி அதிகாரிகளுடன் கேட்டு அறிந்தார்.
மழலையர் பள்ளியில் கற்றுத்தரப்படும் கல்வி முறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்களின் கற்கும் திறன் உள்ளிட்டவை குறித்து லிலுன்லாட்டி மழலையர் பள்ளி முதல்வரிடம் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டறிந்தார்.
0 Comments:
Post a Comment