11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்கள் மாற்ற அரசாணையினால் ஏற்படும் பாதிப்புகள்!
தற்போதைய அரசாணையில்
5 பாடப்பிரிவுக்குழுவில்
அறிவியலில் 4 Combo உள்ளது.
1)phy,chem,math
2)phy,chem,bio
3)phy,math,comp.sci
4)chem,bio, home sci.
பழைய அரசாணைகளில்
phy &chem
இரண்டுமே இரட்டைப்பிறவிகளைப்போல பிரியாமலேயே இருக்கும்.
தற்போதையநிலைமையில்
மொத்தமே 4 காம்பினேஷனில் அறிவியல் புலத்தை அடைத்தது மட்டுமில்லாது
இயற்பியல் இல்லாமலோ
அல்லது வேதியியல் இல்லாமலோ
அடிப்படை அறிவியல் சான்றிதழை பள்ளியிலேயே பெற்றுவிட முடியும்.
இதிலுள்ள மகத்தானஅபாயம் எதுவென்றால்
ஓர் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலி என வைத்துக்கொண்டால் அவ்வாண்டில் இயற்பியல் இல்லாத பாடப்பிரிவில் மாணவரைச் சேர்த்து விட முடியும்.
மாணவர் இன்மை எனில் அவ்வாண்டே அந்த பணியிடத்தைதொகுப்புக்கு ஒப்படைக்க சொல்லுவார்கள்.
இதே நிலை தான் இதரபாடங்களுக்கும்.
6பாடக்குழுவிலிருந்த போது இருந்த பணியிட பாதுகாப்பு இனி இருக்காது.
ஏதாவது ஒன்று காலியாக இருந்தாலும் மாணவன் சேருவான்.மாற்றுப்பணியிலோ
PTA யிலோ பாடம் நடத்துவார்கள்.
ஆனால் இனி இது சாத்தியமில்லை.Chain Link ன் பலம் இழக்கப்படுகிறது.
குறிப்பாக
வரலாறு,தாவரவியல், விலங்கியல்,வேதியியல் பாடங்கள் மிகுந்தபாதிப்படையும் என தோன்றுகிறது.
0 Comments:
Post a Comment