ஜியோ நிறுவனம் 40% கட்டண உயர்வு - பட்டியல் வெளியீடு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 5, 2019

ஜியோ நிறுவனம் 40% கட்டண உயர்வு - பட்டியல் வெளியீடு

ஜியோ நிறுவனம் 40% கட்டண உயர்வு - பட்டியல் வெளியீடு





ஜியோ இந்திய சந்தைக்குள் நுழைந்த நேரத்தில் இணைய சேவைக்கு மட்டுமே கட்டணம் வசூலித்து வந்தது. ஆனால் இந்தியாவில் இருந்த மற்ற தொலை தொடர்பு சேவைகளான வோடோஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் விலையை அதிகரித்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் "ஆல்-இன்-ஒன்" திட்டத்தில் 40 சதவீதம் வரை கட்டண உயர்வை அதிகரிக்க இருப்பதாக கூறியிருந்தது.
அதேபோல டிசம்பர் 6ம் தேதியில் இருந்து அமல்படுத்த போவதாக 40% விலை உயர்வுடன் கூடிய புதிய திட்டங்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
28 நாட்களுக்கு, 2 ஜிபி, 1000 கால்களுக்கு 222 ரூபாயாக இருந்த "ஆல்-இன்-ஒன்" திட்டம் தற்போது 249 ரூபாயாக உயர்ந்து, 27 ரூபாய் அதிகரித்துள்ளது
56 நாட்களுக்கு 2 ஜிபி 1000கால்களுடன், 333 ரூபாயாக இருந்த "ஆல்-இன்-ஒன்" திட்டம் தற்போது கூடுதலாக 1000 கால்களுடன் 444 ரூபாயாக அதிகரித்துள்ளது.
84 நாள் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி, 444 ரூபாய்க்கு வழங்கி வந்த அதே சேவையின் விலையை 599 ரூபாயாக உயர்த்தியுள்ளதால், 155 ரூபாய் அதிகரித்துள்ளது.
கட்டண உயர்வு ஏண்?
வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் இரண்டாவது காலாண்டு இழப்புகள் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருப்பதாக அறிவித்திருந்தன.
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறை ஜாம்பவான்களாக திகழும் இந்த மூன்று நிறுவனங்களும் சேவை கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பொதுத்துறையை சோந்த பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டண உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் கட்டண உயர்வு எவ்வளவு ?
வோடஃபோன் ஐடியா 22 முதல் 67 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 28 நாளைக்கு ரூ.179 என இருந்த கட்டணம் இனி ரூ.299 ஆக இருக்கும்.
84 நாட்களுக்கு ரூ. 569 என இருந்த கட்டணம் இனி ரூபாய் 699-ஆக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை ரூபாய் 1,699 என இருந்த கட்டணம் இனி 2,399ஆக இருக்கும்.
இந்த கட்டண உயா்வுக்கு நிதி சுமையை காரணம் காட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.1.17 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறியுள்ளது.
ஏர்டெல் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள அழைப்புக் கட்டணங்களைவிட புதிய கட்டணம் ஒரு நாளைக்கு 50 பைசா முதல் ரூ.2.85 வரை உயர்ந்துள்ளது. ஏர்டெல்லில் இதற்கு முன்பு 28 நாளைக்கு ரூ.129 என இருந்த கட்டணம் இனி ரூ.148-யாக இருக்கும்.
84 நாட்களுக்கு ரூ. 448 என இருந்த கட்டணம் இனி ரூபாய் 598-அக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை இருந்து வந்த ரூபாய் 1,699 என்ற கட்டணம் இனி ரூ.2,398ஆக இருக்கும்.

Post Top Ad