5 & 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்? - Vikatan Article
5-ம் வகுப்பு மாணவன் புகழேந்தியிடம்"பப்ளிக் எக்ஸாம் அட்டவணைபார்த்தியா?" என்று கேட்டதற்கு, "அப்படின்னா என்ன?" என்கிறான்மழலை மொழியில்.
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புபொதுத் தேர்வுகளுக்கான தேர்வுஅட்டவணையை, தேர்வுகள் இயக்ககம்வெளியிட்டுள்ளது.
5-ம் வகுப்பு பொதுத் தேர்வு 2020, ஏப்ரல்15-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம்தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 அன்று தமிழ், 17 அன்று ஆங்கிலம், ஏப்ரல் 20 அன்று கணக்கு எனத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு 2020, மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம்தேதியுடன் முடிவடைகிறது. மார்ச் 30 அன்று தமிழ், ஏப்ரல் 2 அன்றுஆங்கிலம், ஏப்ரல் 8 அன்று கணக்கு, ஏப்ரல் 15 அன்று அறிவியல், ஏப்ரல் 17 அன்று சமூக அறிவியல் தேர்வுகள்நடைபெற உள்ளன.
இந்தஇரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், காலை 10:15 மணிக்குதொடங்கி, 12:15 மணிக்கு முடிவடையும். மாணவர்கள் வினாத்தாள்களைப்படிப்பதற்கு 10 நிமிடங்களும், விவரங்களைப் பதிவுசெய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் எனதேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்தஅறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்புதெரிவித்துவருகின்றனர்.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ்கஜேந்திரபாபு பேசியபோது, "திருத்தப்பட்ட கல்விஉரிமைச்சட்டத்தில் பொதுத் தேர்வுஎன்று குறிப்பிடாமல், வழக்கமானதேர்வு என்றே குறிப்பிட்டுள்ளனர். மேலும், எட்டாம் வகுப்பு முடியும் வரைஎந்த வாரியத் தேர்விலும் ஒருமாணவன் தேர்ச்சிபெறவேண்டியஅவசியமில்லை என்று சட்டத்தில்கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, இதைப்பொதுத் தேர்வு என்று ஏன் குறிப்பிடவேண்டும்? வழக்கமான தேர்வுக்கும்வாரியத் தேர்வுக்கும் என்ன வேறுபாடுஉள்ளது என்பதைத் தெளிவுப்படுத்தவேண்டும். அவ்வாறுதெளிவுபடுத்தாமல், பொதுத் தேர்வுஎன்று ஏன் இதற்கு அரசாங்கம் ஆணைபோட்டது?
10 வயது குழந்தைக்கு பொதுத் தேர்வுஅவசியமா? ஒரு குழந்தை, பழக்கமுள்ளநபர்களிடம் மட்டுமே எந்தப் பயமும்இல்லாமல் தனது கருத்தைசுதந்திரமாக வெளிப்படுத்தும். அப்படியான சூழலில், தெரியாதஇடத்திற்குச் சென்று எப்படி இந்தப்பொதுத் தேர்வை அந்தக் குழந்தையால்எழுத முடியும்? மொழி ஆற்றல்இருக்கிறதா என்பதை அறியத்தானேஇந்தத் தேர்வு வைக்கப்படுகிறது. அதற்கு ஏன் வேறொரு தேர்வுமையத்திற்குச் சென்று தேர்வு எழுதவேண்டும். இது, பெற்றோர்களுக்குப்பெரிய அளவில் பயத்தைக்கொடுக்காதா? குறிப்பாக, அவர்களுக்கு மதிப்பெண் குறித்த பயம்வந்துவிட்டால், அவர்கள்குழந்தைகளை என்ன பாடுபடுத்துவார்கள் என்பது இந்தஅரசாங்கத்திற்குப் புரியாதா?
மேலும், அனைத்துக் குழந்தைகளும்தாங்கள் படிக்கின்ற பள்ளியிலேயேதேர்வு எழுதுவார்கள் என்று எந்தஉறுதியும் கிடையாது. காரணம், ஒருகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளசென்டரில்கூட மாணவர்கள் தேர்வுஎழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி அந்தக் குழந்தை தேர்வு எழுதஅடுத்த சென்டருக்குத்தயாராகும்போது, அச்சம் இல்லாமல்தனது அறிவை எப்படி சுதந்திரமாகவெளிபடுத்தும்?" என்றார் கோபமாக.
இந்தத் தேர்வுகுறித்து எட்டாம் வகுப்புமாணவி ஒருவரிடம் பேசினோம். "தேர்வு அட்டவணையைப்பார்த்தவுடனேயே பயம் வந்துவிட்டது. பயம் வருவதால், நான் படிக்கவேஇல்லை என்று நினைத்துவிடாதீர்கள். வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவிநான். இருந்தாலும், இந்தத் தேர்வுநடைமுறைகள் எப்படி இருக்குமோஎன்ற கவலை இப்போதே வந்துவிட்டது. இது, பப்ளிக் எக்ஸாம் என்றுசொல்கிறார்கள். அதேநேரத்தில், ஃபெயில் செய்ய மாட்டார்கள் என்றும்கூறுகிறார்கள். இது குழப்பமாகஇருந்தது. அதனால் எங்கள்ஆசிரியரிடம் கேட்டபோது, 'இது பப்ளிக்எக்ஸாம்தான். அதனால் நல்லா படி. இல்லைனா, அடுத்த வருஷமும் இதேவகுப்பில்தான்இருக்கவேண்டியிருக்கும்' என்றுசொன்னார். அதைக் கேட்டதும்எங்களால் எப்படி பயப்படாமல் இருக்கமுடியும்?" என்கிறார் தயக்கத்துடன்.
இந்தப் பொதுத்தேர்வுகள் குறித்து, குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர்'பாடம்' நாராயணனிடம் கேட்டபோது, "5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்துசெய்யக் கோரிநீதிமன்றத்திற்கு செல்லதிட்டமிட்டுள்ளேன். கல்வி உரிமைச்சட்டத்தில், கட்டாய இலவசக் கல்விமற்றும் குழந்தைகளுக்கு கல்விச்சூழலில் எந்த அழுத்தமும்கொடுக்கப்படக்கூடாது என்றுகூறுகிறது. ஒரு குழந்தை, 'குழந்தைநேயச் சூழலில்' இருக்க வேண்டும்என்று அந்தச் சட்டம் வரையறுக்கிறது.
இதுவரை எந்த நாட்டிலும் இதுபோன்றஒரு தேர்வை நடத்தவில்லை. இந்தத்தேர்வினால் மாணவர்களுக்கு எந்தமாதிரியான நன்மைகள் விளைந்திடப்போகுகின்றன? அதை இந்தஅரசாங்கம் முதலில் தெளிவுபடுத்தவேண்டும். அதே போன்று, எந்தமாதிரியான ஆய்வுக்கு உட்படுத்தி, தற்போது இந்தத் தேர்வைமாணவர்களுக்குவைக்கப்போகிறீர்கள் என்பதைவெளிப்படையாகக் கூற வேண்டும்.
முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில்அமைக்கப்பட்ட 'கரிக்குலம் கமிட்டி'என்ன வேலை செய்தது? இந்தத்தேர்வுகுறித்து அந்த கமிட்டி ஏதேனும்பேசியுள்ளதா? என்பவை குறித்துவெள்ளை அறிக்கை தாக்கல்செய்யவேண்டும். புதிய கல்விக்கொள்கைஇன்று வரை விவாதத்தில்தான்உள்ளது. அப்படியிருக்கும்போது, இந்தஆண்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம்வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகொண்டு வர வேண்டிய அவசியம்என்ன? எதன் அடிப்படையில் இந்தத்தேர்வை தமிழக அரசு அறிவித்துள்ளதுஎன்று தெரியவில்லை. கல்வி உரிமைச்சட்டத்திலும் இதுபற்றிசொல்லப்படவில்லை.
பள்ளிக் கல்விக்காக அமைக்கப்பட்டகமிட்டியும் இது தொடர்பாக எந்தப்பரிந்துரையும் செய்யவில்லை. இந்தநிலையில், குழந்தைகளின்உரிமைகளைப் பறிக்கும் செயல்களைநடைமுறைப்படுத்துவது எந்தவகையில் நியாயம்? இது, ஒட்டுமொத்தமாக சட்டத்தை மீறியசெயல். இதற்கு நியாயமான தீர்வுவேண்டும் என்றால், நீதிமன்றத்திற்குச்செல்வது தவிர வேறு வழியில்லை" என்றார்.
5-ம் வகுப்பு மாணவன் புகழேந்தியிடம்"பப்ளிக் எக்ஸாம் அட்டவணைபார்த்தியா?" என்று கேட்டதற்கு, "அப்படின்னா என்ன?" என்கிறான்மழலை மொழியில்.
இதில் வேறு பார்வையை முன்வைக்கிறார், அரசியல் விமர்சகர் சுமந்த்சி ராமன். "ஐந்தாம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத் தேர்வுதேவையில்லை. ஆனால், எட்டாம்வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வுஅவசியமில்லை என்று ஒதுக்கிவிடமுடியாது. இத்தேர்வுகளால், மாணவர்களுக்கு மன அழுத்தம்ஏற்படும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று பெற்றோர்கள்அழுத்தம் தரும் சூழல் தற்போதுமாறியுள்ளது. அதனால் 5-ம் வகுப்புமாணவர்களுக்குத் தேர்வைரத்துசெய்துவிட்டு, 8-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டும் தேர்வுநடத்தலாம்" என்றார்.
"எல்லாவற்றையுமே குறைசொல்லிக்கொண்டிருக்கக்கூடாது" என்று பேசத்தொடங்குகிறார், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, "பத்தாம்வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வுவைப்பதால், அவர்களுக்குமனஅழுத்தம் ஏற்படலாம் என்று பலரும்பேசிவருகிறார்கள். அதை ஏற்கமுடியாது. அதனால் இந்தத் தேர்வுஅவசியமில்லை என்று ஒதுக்கிவிடமுடியாது. தேர்வு எழுதும்போதுதான்மாணவர்கள் அதற்கு முக்கியத்துவம்கொடுத்து படிப்பார்கள். அந்தஅடிப்படையில்தான் மாணவர்களுக்குஇந்தத் தேர்வு வைக்கப்படுகிறது.
மாணவர்களைக் கல்வி கற்க வேண்டும்என்பதற்காகத்தானே அவர்களைபள்ளிக்கு அனுப்புகிறோம். அதேபோன்றுதான், அவர்களுடையதிறமையை மேம்படுத்துவற்காகத்தான்இந்தத் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் அனைத்தையும்குறைகூறிக்கொண்டிருக்கக் கூடாது. எது தேவை, தேவையில்லை என்பதைஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு அதைநாம் அணுக வேண்டும்" என்றார்.
0 Comments:
Post a Comment