சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு

சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது.

சம்பளம் :
ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.



கல்வித் தகுதி :

பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :
பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை
விண்ணப்பிக்கலாம், பழங்குடியினர் : குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு : விண்ணப்பதாரர் குடியிருக்கும் இடத்திற்கும் காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கீ.மீ க்குள்ளதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :



தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/11/2019113069.pdf தறவிறக்கம் செய்து. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/11/2019113069.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2019 மாலை 5.00 மணி வரை







Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3104944

Code