FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு!
FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு!
நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளில் பாஸ்டாக் முறையை அமல்படுத்துவதை பிப்ரவரி 15ம் தேதிக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒத்திவைத்துள்ளது. சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ மூலம் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.
இதன் மூலம், சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் கால நேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும். வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்ட் டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.
இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அண்மையில் ஓர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதாவது கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021, ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என அறிவித்தது. ஆனால் தற்போது பாஸ்டாக் முறையை அமல்படுத்துவதை பிப்ரவரி 15ம் தேதி நீட்டித்து கால அவகாசம் வழங்கியுள்ளது.
பிப்ரவரி 15ம் தேதி முதல் FASTAG கட்டாயம்
*கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021, பிப்ரவரி 15ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம்
*மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி, 4 சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும்போதே ‘பாஸ்டேக்’ எண்ணை அளிப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
*4 சக்கர வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (பிட்னஸ் சர்டிபிகேட்) பெறும்போது, கண்டிப்பாக பாஸ்டேக் வைத்திருக்க வேண்டும். பாஸ்டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று தரப்படும்.
*காப்பீடுச் சட்ட திருத்தத்தின்படி, வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பெறும்போதும் கண்டிப்பாக பாஸ்டேக் அட்டை வைத்திருக்க வேண்டும்.
*காப்பீடு எடுக்கும்போது, பாஸ்டேக் அடையாள எண்ணை அளிப்பதும் கட்டாயம். இந்த நடைமுறை மட்டும் 2021, ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
புதுச்சேரியில் 04.01.2021 முதல் பள்ளிகள் திறப்பு - Directorate Of School Education Circular

As approved by the Govt . of Puducherry , Schools will reopen on 04.01.2021 in Puducherry and Karaikal regions for conduct of regular classes for students of std I to XII to be conducted only in the forenoon sessions from 10.00 am to 1.00 pm on all 6 days ( Monday to Saturday ) of the week . The Heads of all Govt./ Private Schools in Puducherry and Karaikal regions are instructed to adhere to the Standard Operating Procedure ( SOP ) enclosed as Annexure to this circular.
BigBreaking || சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு: மே 4-ல் தொடக்கம் :
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10 ஆம் தேதி முடிவடையும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கப் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை சிபிஎஸ்இ குறைத்தது. இதற்கிடையே, 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ கடந்த மாதம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களும், ஆசிரியர்களும் ட்விட்டர் மூலம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர்களின் கருத்துகள் குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை இன்று (டிச.31) மாலை 6 மணிக்கு வெபினார் நிகழ்ச்சியில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
அதன்படி, 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10ஆம் தேதி முடிவடைகின்றன. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும், ஜூலை 15ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெபினாரில் தெரிவித்தார்.
இந்த நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.
தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், அட்டவணை உள்ளிட்ட அனைத்தும் https://cbse.nic.in/ என்ற சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி இ-பாஸ் கட்டாயம் ! தமிழக அரசு உத்தரவு !!
ஜனவரி 1 முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் வாய்ஸ் கால் இலவசம்
DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி- நிர்வாக சீர்திருத்தங்கள் - நிர்வாக சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகள்- நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
பள்ளிக்கல்வி- நிர்வாக சீர்திருத்தங்கள் - நிர்வாகசீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகள்- நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின்செயல்முறைகள்!!! DOWNLOAD BELOW LINK
FLASH NEWS-NMMS EXAM ONLINE REGISTRATION DATE ANNOUNCED
11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 6 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 5 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 4 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 3 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பாடம் 14 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பாடம் 13 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பாடம் 12 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பாடம் 11 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பாடம் 10 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பாடம் 9 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 8 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 7 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 6 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 5 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 4 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 3 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பாடம் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய வயது அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாநில அரசு பணியாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊதியம் உயர்வு மற்றும் ஓய்வூதிய வயது அதிகரிப்பு போன்ற சலுகைகளை அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம்:
தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய வயது அதிகரிப்பதாக அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் காலியான அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் மேலதிக வயது மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கான வயதை அதிகரிப்பதற்கான முடிவை அவர் அறிவித்தார். இதன் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவார்கள்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் கூறியதாவது, “இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9,36,976 அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி மானிய உதவி ஊழியர்கள், வசூலிக்கும் ஊழியர்கள், தினசரி கூலிகள், முழுநேர படைப்பிரிவு ஊழியர்கள், பகுதிநேர படை ஊழியர்கள், வீட்டு காவலர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், வித்யா தன்னார்வலர்கள், ஓய்வூதியம் பெறும் மக்கள் ஆகியோர் பயனடைவார்கள்.
சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் கூட அதிக சம்பளம் கிடைக்கும். தேவைப்பட்டால், ஆர்டிசி மீதான நிதிச் சுமையை மாநில அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக பிப்ரவரி மாதத்திற்குள் ஊழியர்கள் தொடர்பான அனைத்து சேவை சிக்கல்களும் விரிவாக தீர்க்கப்படும். ஓய்வூதிய வயதை தவிர்த்து, அரசாங்கம் பதவி உயர்வுகளைத் தீர்த்து, தேவையான இடங்களில் இடமாற்றங்கள், சேவை விதிகளை எளிமைப்படுத்துதல் மற்றும் இரக்கமுள்ள நியமனங்கள் ஆகியவற்றை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களை அடையாளம் கண்டு பிப்ரவரி முதல் அரசு சேவையில் ஆட்சேர்ப்பு தொடங்கும்,” என்றும் அவர் கூறினார்.
மேலும் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய சில காலத்திலேயே ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தியதை அவர் நினைவு கூர்ந்தார். இப்போது மற்றொரு உயர்வுக்கான நேரம். அரசாங்கத்தின் நிதி வரம்புகளுக்குள், குறைந்த அளவு சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனவரியில் 8 மண்டலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தகவல்
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்க வாய்ப்பு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு
மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
சிறுபான்மையினர் நலத்துறையின் கடிதங்களில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்வதாகவும் அதற்காக , தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட User Name மற்றும் Password அம்மைய நிர்வாகிகளுக்கு கொடுப்பதாகவும் , அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதைத் தவறாகப் பிரயோகித்து மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை online மூலம் National Scholarship Portal - ல் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே , இதுகுறித்து , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. எனவே , பார்வையிற்காண் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் User Name மற்றும் Password பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால் அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , அனைத்து தலைமையாசிரியர்களும் அடுத்த இரு தினங்களுக்குள் ( 31.12.2020 ) இப்பணியை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 8- Choose the correct answer
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 7- Choose the correct answer
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 6- Choose the correct answer
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 5- Choose the correct answer
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 4- Choose the correct answer
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 3- Choose the correct answer
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Choose the correct answer
11th Accountancy - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 3- Chapter 8 - Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 3- Chapter 7 - Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 3- Chapter 6 - Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Chapter 5 - Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Chapter 4 - Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Chapter 3 - Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Chapter 2 - Choose the correct answer
11th Botany - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Chapter 1 - Choose the correct answer
11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 7- Choose the correct answer
11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 6- Choose the correct answer
11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 5- Choose the correct answer
11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 4- Choose the correct answer
11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 3- Choose the correct answer
11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Choose the correct answer
11th Chemistry - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Chapter 8 - Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Chapter 7 - Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Chapter 6 - Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Chapter 5 - Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Chapter 4 - Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Chapter 3 - Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Chapter 2 - Choose the correct answer
11th Computer Applications - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Chapter 1 - Choose the correct answer
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 10 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 9 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 8 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 7 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 6 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 5 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 4 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 3 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 12 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 11 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 10 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 9 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 8 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 7 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 6 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 5 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 4 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 3 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11 ஆம் வகுப்பு - பொருளியல் - பாடம் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி
11th Physics - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Choose the correct answer
11th Physics - One Marks Free Online Test - Vol.1 - Unit 1- Numerical Problems
11th Physics - One Marks Free Online Test - Vol.1 - Unit 2- Choose the correct answer
11th Physics - One Marks Free Online Test - Vol.1 - Unit 3- Choose the correct answer
11th Physics - One Marks Free Online Test - Vol.1 - Unit 4 - Choose the correct answer
11th Physics - One Marks Free Online Test - Vol.1 - Unit 5 - Choose the correct answer
11 ஆம் வகுப்பு - கணிதவியல் - தொகுதி 1 - பாடம் 6 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - கணிதவியல் - தொகுதி 1 - பாடம் 5 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - கணிதவியல் - தொகுதி 1 - பாடம் 4 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - கணிதவியல் - தொகுதி 1 - பாடம் 3 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - கணிதவியல் - தொகுதி 1 - பாடம் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - கணிதவியல் - தொகுதி 1 - பாடம் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - வேதியியல் - தொகுதி 1 - பாடம் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - வேதியியல் - தொகுதி 1 - பாடம் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - வேதியியல் - தொகுதி 1 - பாடம் 3 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - வேதியியல் - தொகுதி 1 - பாடம் 4 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - வேதியியல் - தொகுதி 1 - பாடம் 5 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - வேதியியல் - தொகுதி 1 - பாடம் 6 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
11 ஆம் வகுப்பு - வேதியியல் - தொகுதி 1 - பாடம் 7 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை
சாதிவாரி கணக்கெடுப்பு! நீதிபதி குலசேகரன் புதிய முடிவு !!
கணக்கெடுப்பு நடத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் , கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்த நீதிபதி குலசேகரன் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த 7-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.குலசேகரன், ஆணையத்தின் தலைவராக கடந்த 21-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இவ்வாணையம் முதல் செயல்பட தொடங்கி உள்ளது. புதிய அலுவலகத்தில் நீதிபதி குலசேகரன் தனது பணியை தொடங்கினார். பின்னர் நீதிபதி குலசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை எந்த அடிப்படையில் செய்தால் அதனை விரைவாகவும், சரியான முறையிலும் முடிக்க முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அத்துடன், கடந்த 1970-ம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டநாதன் ஆணையம் மற்றும் 1985-ம் ஆண்டு அம்பாசங்கர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், மற்றும் தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அத்துடன் கருத்தரங்கம் நடத்தி சாதிவாரியான புள்ளி விவரங்களை பெறவும் திட்டமிட்டுள்ளோம். தேவைப்படும்பட்சத்தில் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்துள்ளோம் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை 6 மாதத்துக்குள் முடித்து ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன ??? Vikatan ARTICLE
கடன்களுக்கு வங்கிகள் எப்படிவட்டிவிகிதம்கணக்கிடுகின்றனதெரியுமா? - #LoanVenumaSir -
7 வங்கிகளில், குறிப்பாக தனியார்வங்கிகளில் அல்லதுவங்கிசாரா நிதிநிறுவனங்களில் நீங்கள்கடன்வாங்கும்போது ஒரு விஷயத்தில்மிகவும்கவனமாக இருக்க வேண்டும். அதுவட்டி விகிதக் கணக்கு.
கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்கள் மற்றும்தனியார் நிதிநிறுவனங்களில் எதில்தனிநபர் கடன்வாங்கினால் வட்டிகுறைவாக இருக்கும்என்று கேட்டிருந்தோம். இந்தக்கேள்விக்கு சரியான பதிலைஅதாவது, பொதுத்துறைவங்கிகள்தான் எனப் பலரும்சரியாகச்சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில்சொன்னஅனைவருக்கும் பாராட்டுகள்.
அது மட்டுமல்ல, கடந்தஅத்தியாயத்தைப் படித்தமதுக்கூர் மணிஎன்பவர் ஒருஆலோசனைகேட்டிருக்கிறார். அவர்கேட்டிருப்பதாவது...
கடன் வாங்கினேன், திரும்பக் கட்டமுடியவில்லை...
``நான்தனியார் கட்டுமானநிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோதுதனியார் வங்கியில் எனதுபெயரில்சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்தபிணையும்வைக்காமல் தனிநபர் கடன்வாங்கினேன். தற்போதுகொரோனாவின் காரணமாகக் கடந்தஒன்பது மாதமாகவேலையின்றிஇருக்கிறேன். இந்த நிலையில, கடன்தவணையைக் கட்ட வேண்டும்என்றுவீட்டுக்கு வந்து தொந்தரவுசெய்கின்றனர். நான் என்ன செய்யவேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்றுகேட்டிருக்கிறார். அவருக்கானஎனது பதில்...
6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கிவகுத்துள்ளவழிகாட்டுதலின்படி, கடன்தவணை தள்ளிவைப்பு(Loan Moratorium) வசதியைப்பயன்படுத்திக்கொள்ளலாம். கொரோனாபிரச்னையின் காரணமாகஅனைத்து
வங்கிகளும் தங்கள்வாடிக்கையாளர்களுக்கு மார்ச்மாதம்முதல் ஆகஸ்ட் மாதம் வரைஆறுமாத காலம் மாதத்தவணைகளை தள்ளிசெலுத்தும் வசதியைக்கொடுக்குமாறுரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டிவசூலிக்கப்பட்டாலும்சாதாரணவட்டிக்கும், கூட்டு வட்டிக்கும்உள்ளவித்தியாசத் தொகையை மத்தியஅரசுசலுகையாக வழங்குகிறது. இதுகொரோனா காலத்துக்குமுன்பு தாங்கள்கடனை ஒழுங்காகசெலுத்திஇருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கிவிதிமுறைகளுக்குஉட்பட்டு வங்கிகள்இந்த வாய்ப்பைவாடிக்கையாளர்களுக்குத்தருகின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்என்பதே நான் அவருக்குஅளிக்கும்பதில்.
ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவுவட்டி?
சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார்வங்கிகளில் அல்லதுவங்கிசாரா நிதிநிறுவனங்களில் நீங்கள்கடன்வாங்கும்போது ஒரு விஷயத்தில்மிகவும்கவனமாக இருக்க வேண்டும். அதுவட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில்தனிநபர்கடன் ரூ.2 லட்சத்துக்குவிண்ணப்பிப்பதாகவைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம்24% எனில் (தற்போதைய சூழ்நிலையில்தனிநபர் கடன் வட்டிவிகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரைதரப்படுகிறது), நம்மில்பலர் மாதம்இரண்டு வட்டிஎன்ற முறையில் நம்மிடம்வட்டி பணம் வசூலிக்கிறதுஎன்றுநினைக்கிறார்கள்.
அதாவது, வருடத்துக்கு 24% வட்டிஎன்றால் மாதத்துக்கு2% வட்டி என்றுகணக்கிடுகிறார்கள். இதுதவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்குமூன்றுவருடங்களுக்கு மாதாந்தரத் தவணைரூ.7,847 என்றுவரும். அப்படி மூன்றுவருடங்களுக்குச்செலுத்தினால், மொத்த வட்டி செலுத்தியதொகைரூ.82,476 என்று வரும்.
இதுவே நாம் நடைமுறையில்பேசும்இரண்டு வட்டி என்றுகணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டியமொத்தவட்டி தொகை மூன்றுவருடங்களுக்குரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாதவட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்துநாம் சாதாரணமாக வட்டிகணக்கிடுவதற்கும் வங்கிகள்வட்டிகணக்கிடுவதற்கும் உள்ளவித்தியாசத்தை நீங்கள்உணரலாம்.
கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி
இதில் தேசியமயமாக்கப்பட்டவங்கிகளில் ஒவ்வொரு மாதமும்வட்டியைமட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போதுவேண்டுமானாலும்பகுதி
பகுதியாகவோ, மொத்தமாகவோசெலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறுபகுதி பகுதியாகச்செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறுவட்டித்தொகை குறையும். இத்தகையகடன் திட்டம்பெரும்பாலும் தங்க நகைக்கடன்களில்வழங்கப்படுகிறது.
ஒரே விதமான கடனுக்கு, வட்டிவிகிதம்என்பது ஒவ்வொரு வங்கிகள்மற்றும்வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குஇடையேமாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும்மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லதுநிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல்வருமானம், சொத்து மதிப்பு, கடன்தகவல் அறிக்கையில் எந்தபாதகமானவிஷயங்களும்இடம்பெறாததுஆகியவற்றைக் கொண்டு வட்டிவிகிதம்தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்குசாதகமாக இருந்தால், வட்டிவிகிதம்குறைவாக இருக்கும்.
ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!
மேற்சொன்னஅம்சங்கள்மட்டுமல்லாமல், இப்போதுவந்திருக்கும் ஃபின்டெக்(Fintech) நிறுவனங்கள் தங்களின்சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன்அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டுபயணங்கள், கடன் தேவையின்அவசரம்ஆகியவற்றைக் கொண்டுதங்களுக்கு கொடுக்கப்படவேண்டியகடன் அளவையும் வட்டிவிகிதத்தையும்தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள்எந்தவங்கியிலோ, வங்கிசாரா நிதிநிறுவனத்திலோ கடன்வாங்குவதற்குமுன்னால், அந்த வட்டிவிகிதம்தான்தங்களுக்குகிடைக்கக்கூடிய குறைந்த வட்டிவிகிதம்என்று உறுதிப்படுத்திக்கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ்மூலம் கடன்தரும்நிறுவனங்களிலிருந்துமுடிந்தவரை கடன் பெறாமலேஇருப்பதுநல்லது.
இப்போதுமாதாந்தரத் தவணைகணக்கீட்டு முறையையும்வட்டிவிகிதங்கள் பற்றியானதகவல்களையும் பற்றி ஓரளவுக்குதெளிவடைந்துஇருப்பீர்கள் என்றுநம்புகிறேன்.
TRB - முதுநிலை கணினி ஆசிரியா் தோ்வுப் பட்டியல் வெளியீடு.
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டுள்ள 742 முதுநிலை கணினி ஆசிரியா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2018-2019-ஆம் கல்வியாண்டில் முதுநிலை கணினி ஆசிரியா் பணியிடத்தில் 814 நபா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு, 2019-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அவா்களுக்கு இணையவழியிலான எழுத்துத்தோ்வு ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இவா்களுக்கான தோ்வு முடிவுகள் 2019 நவம்பா் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடா்ந்து இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு 2020 ஜனவரியில் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் வெளியிடப்பட்ட தோ்வு முடிவை எதிா்த்து, உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
அந்த வழக்கில் 116 மையங்களில் தோ்வு எழுதியவா்களின் தோ்வு முடிவுகளை வெளியிடலாம் எனவும், நாமக்கல், கும்பகோணம், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்ற மூன்று தோ்வு மையங்களில் தோ்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வெளியாகியிருந்தது.
இந்தச் சூழலில் ஆசிரியா் தோ்வு வாரியம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 742 நபா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நிரப்பப்படாமல் மீதமுள்ள இடங்களுக்கு, நீதிபதி ஆதிநாதன் விசாரணை முடிந்த பின்னா், அவா் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தோ்வுப் பட்டியலை வெளியிடுவது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
எம்.பில். மருத்துவ உளவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்: எம்டிசி அறிவிப்பு
ஆண்டு இறுதித் தேர்வு குறித்து 10 நாளில் அறிவிப்பு: செங்கோட்டையன் பேட்டி
மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடாதிங்க........
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி ஆணை வழங்க கோரி மனு :
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி ஆணை வழங்க கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொடுத்துள்ள மனுவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிகபட்ச வயது 40 என்பதனை அரசு நீக்க வேண்டும் எனவும் என்சிடிஇ அறிவிப்பின்படி ஆணை வழங்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு பள்ளிகளில் புதிய வேலை வாய்ப்பு உருவாகி பணி நியமனம் வழங்க வேண்டுமெனவும் 2013ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் ஆசிரியர்களுக்கு 100 ரூபாயில் அனைத்து வசதிகளுடன் தங்கும் விடுதி :
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.
🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012. நாள்-04.07.2017
🌟 மேற்காணும் அரசாணையின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகம் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
🌟 முகவரி:
ஆசிரியர் இல்லம்,
பிளாக் எண்.36,
கஸ்தூரி மஹால் சாலை,
கோ.அபிஷேகபுரம்,
திருச்சிராப்பள்ளி,
(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),
(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).
🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922.
ஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்
ஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்...
சென்னை ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பவேண்டாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
தமிழக தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதி முடிவு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
2021-22 முதல் 2023-24 வரை, 3 ஆண்டுகளுக்கு School Development Plan-Form
2021-22 முதல் 2023-24 வரை, 3 ஆண்டுகளுக்கு School Development Plan- FORM 2 LINKS AVAIL IN BELOW
CLICK HERE TO DOWNLOAD -LINK -1
CLICK HERE TO DOWNLOAD -LINK 2
ஜனவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ள மாநிலங்கள்-?
தினசரி கொரோனா பாதிப்புஎண்ணிக்கை 30,000க்கும் குறைந்துவரும் நிலையில், பல மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீண்டும்பள்ளிகளை திறக்க முடிவுசெய்துள்ளன.
கொரோனா பரவல் காரணமாக நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும்கடந்த அக்டோர் முதல் பள்ளிகளைமீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதிவழங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு சிலமாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டநிலையில், கொரோனா அதிகரிப்பால்அவை மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் வரும் ஜனவரி 1 முதல்பள்ளிக்ளை திறக்க சில மாநிலங்கள்முடிவு செய்துள்ளன. ஒரு சிலமாநிலங்கள், மூத்த மாணவர்களுக்குமட்டுமே பள்ளிகளைத் திறக்க முடிவுசெய்துள்ளன.
பள்ளிகளை மீண்டும் திறப்பதுதொடர்பான வழிகாட்டுதல்களைஉள்துறை அமைச்சகம் வெளியிட்டது, அதில் மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள், பள்ளிகளை திறப்பதுகுறித்த முடிவுகளை எடுக்க அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது. மேலும்பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தமுடிவு அந்தந்த பள்ளி / நிறுவனநிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, நிலைமையை மதிப்பீடு செய்வதன்அடிப்படையில் எடுக்கப்படும் என்றுமத்திய உள்துறை அமைச்சகம்கூறியிருந்தது.
ஜனவரி முதல் பள்ளிகளை மீண்டும்திறக்க திட்டமிட்டுள்ள மாநிலங்கள் :
பீகார்: பீகாரில் உள்ள அனைத்து அரசுபள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள்2021 ஜனவரி 4 முதல் மீண்டும்திறக்கப்படும். ஆனால், முதற்கட்டமாகமேல்நிலை வகுப்புகள் மீண்டும்தொடங்கப்பட உள்ளன. மேலும் 15 நாட்களுக்கு நிலைமையை மதிப்பாய்வுசெய்த பின்னர், ஜூனியர் பிரிவுகளும்மீண்டும் திறக்கப்படும்.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளஅனைத்து பள்ளிகளும் ஜனவரி 4 ஆம்தேதி மீண்டும் திறக்கப்படும். ஆரம்பத்தில், பள்ளிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைஅரை நாள் வகுப்புகள் நடைபெறும். ஜனவரி 18 முதல் முழு நாள் வகுப்புகள்இருக்கும். அனைத்து அடிப்படைபாதுகாப்பு விதிமுறைகளும்பின்பற்றப்படும் நிறுவனங்களால், கல்வி அமைச்சர் ஆர் கமலகண்ணன்தெரிவித்துள்ளார்.
கர்நாடகா: கர்நாடக அரசு ஜனவரி 1 முதல் 10 மற்றும் 12 ஆம் தேதிகளுக்குவகுப்புகளை மீண்டும் தொடங்கஅனுமதித்துள்ளது. இருப்பினும், பள்ளிகளில் சேர விரும்பும்மாணவர்களுக்கு பெற்றோரிடமிருந்துஎழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படும். இந்த அறிவிப்பை வெளியிட்ட கர்நாடககல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார், 6 முதல் 9 வகுப்புகளுக்கான வித்யாகமதிட்டம் ஜனவரி 1 முதல் தொடங்கும்என்றும் கூறினார்.
அசாம்: இதேபோல், பள்ளிகள் மற்றும்பிற கல்வி நிறுவனங்களை தொடக்கநிலை முதல் பல்கலைக்கழக நிலைவரை ஜனவரி 1 முதல் மீண்டும் திறக்கஅசாம் அரசு முடிவு செய்துள்ளது.
புனே: புனே மாநகராட்சியில் உள்ளபள்ளிகள் ஜனவரி 4 முதல் மீண்டும்திறக்கப்படும். புனே மாநகராட்சி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கான பள்ளிகள் ஜனவரி4 முதல் மீண்டும் திறக்கப்படும் என்றுகூறியுள்ளது. அனைத்து பள்ளிகளும்கொரோனா வழிகாட்டுநெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்என்றும் அது கூறியது.
தமிழ்நாடு: தமிழகத்தை பொறுத்தவரை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்தாலோசித்துபின்னர் பள்ளிகள் திறப்பது குறித்துஉரிய முடிவெடுக்கப்படும் என்றுபள்ளிக்கல்வி துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு பிறகுபள்ளிகளை திறக்க பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. எனினும்இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புஇன்னும் வெளியாகவில்லை..
இதற்கிடையில், மத்தியப் பிரதேசம், சிக்கிம், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான்போன்ற மாநிலங்கள் ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கான பள்ளிகளைமீண்டும் திறந்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளிடம் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை மனு: தேர்தல் வாக்குறுதியில் இணைக்க வலியுறுத்தல்:
வரும் ஆண்டுகளிலாவது தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில், பிரதான அரசியல் கட்சிகளிடம் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மனு அளித்து வருகிறது.
திருச்சியில் நேற்று (டிச. 28) பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சகாயசதீஷ் உள்ளிட்டோர் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் எஸ்.சகாயசதீஷ் இன்று (டிச. 29) கூறியதாவது:
"2004-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உரிய கால இடைவெளியில் வழங்கப்பட்டு வந்த பணி மேம்பாடு, ஊதிய உயர்வு ஆகியவற்றை கிடப்பில் போடாமல் உடனடியாக வழங்க வேண்டும்.
இளையோர்-மூத்தோர் முரண்பாடுகளைக் களைந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதிய கணக்கீட்டின்போது வழங்கப்பட்ட ஊதியத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற விதிமீறல் நடவடிக்கைகளைக் களைந்து ஓய்வூதியச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.
அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தகுதி வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
ஊழலுக்கு இடம் அளிக்காமல் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பி, கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
சமூக நீதியை அழிக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்து, மாநில அரசின் கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.
தமிழ் மொழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து உயர் கல்வியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் மிக விரைவில் வரவுள்ள நிலையில், வரும் ஆண்டுகளிலாவது எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இணைக்க வலியுறுத்தி எங்கள் கோரிக்கை மனுவை அளித்து வருகிறோம்.
திமுகவைத் தொடர்ந்து அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட அனைத்து பிரதான கட்சிகளிடமும் மனு அளிக்க உள்ளோம். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்".
இவ்வாறு சகாயசதீஷ் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக மிக அவசரம்...!!!!Notification Sent by Income Tax Department:
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக மிக அவசரம்...!!!!Notification Sent by Income Tax Department
வருமான வரியினை தாக்கல் (E-Filing) செய்யாதவர்கள் வருகிற 31 டிசம்பர் 2020க்குள் தாக்கல் செய்துவிடவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் ரூ.10,000/- அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.