10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை!
10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்த தவறான வாசகம் இடம் பெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அந்த வாசகம் நீக்கப்படும் என்றும் ஏற்கனவே உள்ள புத்தகத்தில் ஸ்டிக்கர் கொண்டு ஒட்டப்படும் என்றும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.