5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கட்டணம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்ப

பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், '5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் சிறப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். அரசு பள்ளியில் படிக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை. 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவு 75% இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர் வருகை பதிவேட்டை அரசு கண்காணிக்கும். அரசு நீட் தேர்வு மையம் துவங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்' என்றார்.