வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 31, 2020

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் !

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் !

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியருக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை  (01.02.2020)அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இம்முகாம் ஆசிரியருக்காக மட்டும் சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளதால் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர் என ஆண்,பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை, பல முன்னணி தனியார் பள்ளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

 இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. 

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் பள்ளிகள் மற்றும் வேலை நாடும் மனுதாரர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

 எனவே ஆசிரியர்கள் அதிகளவு கலந்துகொண்டு முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கின்றனர்.

Post Top Ad