Flash News : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 29, 2020

Flash News : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு.

Flash News : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு.

குரூப் 4 விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி , முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் , தேர்வர்கள் , புரோக்கர்கள் என 14 பேரை கைது செய்துள்ளனர் . முறைகேட்டில் தொடர்புடைய 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வந்தது .

 இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வருவதால் , தகுதிநீக்கம் செய்ய வேண்டியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது . இதனால் , ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது குறித்து , தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது . இதுகுறித்து முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக , அமைச்சர் ஜெயக்கு மார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் "குரூப் 4 தேர்வுகள் ரத்து செய்யப்படாது. தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவர்" என்று தெரிவித்தார்.

Post Top Ad