புதிதாக பணியில்‌ சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 13, 2020

புதிதாக பணியில்‌ சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை

புதிதாக பணியில்‌ சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை





தமிழகத்தில்‌ 10, 11, 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கியுள்ள நிலையில்‌, புதிதாக பணியில்‌ சேரும்‌ 1,800 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு விடுமுறை இல்லை என்று கல்வித்‌ துறை அதிகாரிகள்‌ தெறி வித்தனர்‌.


தமிழக அரசு பள்ளிக ளில்‌ 10, 11, /2ம்‌ வகுப்புக ளுக்கான ஆசிரியர்கள்‌ பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால்‌, மாணவர்களின்‌ கல்வி பாதிக்கப்படுவதாக புகார்‌ எழுந்தது. எனவே, அரசு பள்‌ ளிகளில்‌ காலிப்பணியி டங்கள்‌ நிரப்ப வேண்டும்‌ என்று கோரிக்கை எழுந்‌ தது. அதன்படி, ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்‌ கள்‌ நியமனத்துக்கான தேர்வு கள்‌ நடத்தப்பட்டது. 

இந்த தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு எந்தவித நேர்முகத்‌ தேர்வும்‌ இல்லா மல்‌, கலந்தாய்வு மூலமாக பணிநியமன ஆணைகள்‌ வழங்கப்பட்டது. இதைத்‌ தொடர்ந்து புதிதாக பணி நியமனம்‌ பெற்ற 1,800 முதுகலை பட்டதாரி ஆசி ரியர்கள்‌ இன்று (புதன்‌) அந்‌ தந்த பள்ளிகளில்‌ பணியில்‌ இணைகின்றனர்‌. இந்நிலையில்‌, பிளஸ்‌ 2 பொதுத்தேர்வுக்கு இன்‌ னும்‌ 20 நாட்கள்‌ மட்டுமே 60, திண்‌ 55 இருக்கிறது. தொடர்ந்து 10, 11ம்‌ வகுப்பு மாணவர்களுக்‌ கான பொதுத்தேர்வுக ளும்‌ நடக்க உள்ளது. 


மாணவர்களை தேர்வுக்கு தயார்‌ செய்யும்‌ விதமாக, புதிதாக பணியில்‌ சேர்ந்‌ துள்ள /,800 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி இல்லை, பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வர வேண்டும்‌ என்பது உள்ளிட்ட உத்தர வுகள்‌ பள்ளிக்‌ கல்வி இயக்‌ குனரகம்‌ சார்பில்‌ பிறப்பிக்‌ கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்‌ துறை அதிகாரிகள்‌ கூறி யதாவது: பொதுத்தேர்‌ வுகள்‌ தொடங்கவுள்ள நிலையில்‌, மாணவர்களை தயார்படுத்த வேண்டியது ஆசிரியர்களின்‌ கடமை. இந்நிலையில்‌, புதிதாக பணியில்‌ இணைந்துள்ள முதுகலை பட்டதாறி ஆசி ரியர்களுக்கு பள்ளியின்‌ சூழ்நிலைகள்‌ குறித்து தெரி யாது. 

எனவே, மாணவர்‌களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவதில்‌ கூடு தல்‌ பணி அவசியமாகிறது. பொதுத்தேர்வு எழு தும்‌ மாணவர்கள்‌ அடுத்த ்‌ ஆண்டுகளில்‌ முக்கிய பதவிகளில்‌, வேலைக ளில்‌ இருக்க வேண்டும்‌. அதற்காக, ஆசிரியர்களின்‌ நடவடிக்கைகள்‌ முன்மாதிரியாக இருக்க வேண்டும்‌. புதிதாக பணியில்‌ சேரும்‌ ஆசிரியர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு மாதம்‌ ஒருமுறை மட்டுமே விடுமுறை எடுக்க அனுமதி இருக்கிறது. 


இந்தநிலையில்‌, அடுத்த 20 நாட்களில்‌ பொதுத்‌ தேர்வு நெருங்குவதால்‌ புதிதாக சேர்ந்துள்ள ஆசிரியர்கள்‌ (சனி, ஞாயிறு தவிர்த்து) இன்று முதல்‌ 20 நாட்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதிக்க வேண்‌ டாம்‌ என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்‌ பட்டுள்ளது. முக்கியமான பாடங்‌ களை சுருக்கமாகமீண்டும்‌ ஒருமுறை நடத்த முயற்‌ சிக்க வேண்டும்‌. 

குறிப்‌பிட்ட நேரத்துக்கு ஆசிரியர்கள்‌ பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள்‌ கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்‌. இதன்‌ அடிப்படையில்‌, தாமதமாக பள்ளிக்கு வரும்‌ ஆசிரியர்கள்‌ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்ப டும்‌. இவ்வாறு அவர்கள்‌ தெரிவித்தனர்‌.



Post Top Ad