தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு அளித்து கல்வி அதிகாரி உத்தரவு - விரைவில் துறை ரீதியான நடவடிக்கை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 13, 2020

தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு அளித்து கல்வி அதிகாரி உத்தரவு - விரைவில் துறை ரீதியான நடவடிக்கை

தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு அளித்து கல்வி அதிகாரி உத்தரவு - விரைவில் துறை ரீதியான நடவடிக்கை




பட்டியலின மாணவர்கள்‌ மூலம்‌ கழிவறையை சுத்தம்‌ செய்யவைத்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்‌ டுள்ளது.

கோவை நரசிம்மநா யக்கன்பாளையம்‌ அருகே புதுப்பாளையத்தில்‌ உள்ள ஊராட்சி ஒன்றியதொடக்‌ கப்‌ பள்ளியில்‌ 70க்கும்‌ மேற்‌ பட்ட மாணவர்கள்‌ படித்து வருகின்றனர்‌. தலைமை ஆசிரியராக குமரேஷ்வரி பணியாற்றி வருகிறார்‌. 5ம்‌ வகுப்பில்‌ படிக்கும்‌ பட்‌ டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்களை, பள்ளி கழி வறையை சுத்தம்‌ செய்ய கட்டாயப்படுத்துவதாக வும்‌ தரக்குறைவாக பேசி அடித்ததாகவும்‌ கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாண வர்கள்‌ தங்கள்‌ பெற்றோ ரிடம்‌ தெரிவித்துள்ளனர்‌. இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்‌ மற்றும்‌ ஊர்‌ பொதுமக்கள்‌ போராட்டம்‌ நடத்தினர்‌. இதைத்‌ தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர்‌ கிருஷ்ணமூர்த்தி சம்பந்‌தப்பட்ட ஆசிரியையிடம்‌ விசாரணை நடத்தினார்‌. 

அப்போது, தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றவேண்டும்‌ என பொதுமக்கள்‌ கோரிக்கை விடுத்தனர்‌. இந்த நிலை யில்‌ தலைமை ஆசிரியை குமரேஷ்வரி கட்டாய விடுப்பில்‌ அனுப்பப்பட்‌டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்‌ கல்வி அதிகாரிகள்‌ கூறும்‌ போது, “நேற்று முன்தி னம்‌ கோவை மாவட்ட முதன்மை கல்வி அதி காறி மற்றும்‌ மாவட்ட கல்வி அதிகாரி ஆகி யோர்‌ இடமாற்றம்‌ செய்‌ யப்பட்டனர்‌. இதனால்‌ இந்த விவகாரம்‌ குறித்து உடனடியாகமுடிவுஎடுக்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஹெச்‌. எம்‌. 2 நாட்கள்‌ கட்டாய விடுப்பில்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்‌. புதிய கல்வி அதிகாரிகள்‌ பதவியேற்றவுடன்‌ அவர்‌ மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும்‌” என்றனர்‌.



Post Top Ad