பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்தப்படுமா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 6, 2020

பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்தப்படுமா?

பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்தப்படுமா?


பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காதல் என்பது அன்றைய சமூகத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப் பட்டது. அந்தக் காதல் என்பதும் உறவுகளில் ஏற்படுவதாக இருக்கும். பள்ளியிலேயே காதல் என்பது தற்போது பரவலாக பேசப்படும் விஷயமாக உள்ளது.

கல்வி பயில்கின்ற போது தடுமாற்ற வயதில் உள்ள மாணவர்கள் காதல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாது, மாணவர்களின் எதிர்காலம் குறித்த கனவில் வாழ்கின்ற பெற்றோர்களும் பெரும் கவலையடைகின்றனர். இதனால் மாணவர்களை நல்வழிப் படுத்த பள்ளிகளில் நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், தற்போது மாணவர்கள் காதல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த டிவி, சினிமா, செல்போன்கள் தான் காரணம். கூட்டு குடும்ப முறை அருகி விட்ட காரணத்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லித் தந்த தாத்தா, பாட்டிகள் இல்லாமல் போய் விட்டனர். உறவுகளுக்கு பயந்த காலமும் போய் விட்டது, அப்போது பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்தப் படுவதில்லை. 

பள்ளிகளில் மீண்டும் நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தினந்தோறும் இந்த வகுப்பை அரை மணி நேரமாவது நடத்த வேண்டும். இந்த நன்னெறி வகுப்புகள் தமிழகத்தில் எல்லா அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நடத்தப் பெற வேண்டும். பெற்றோர்களும் உறவுகளைப் பேண வேண்டும். பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து நல்ல விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துமாறு செய்ய வேண்டும் என்றார்.

Post Top Ad