எது வெற்றி? - அரசு பள்ளி மாணவனின் கவிதை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 13, 2020

எது வெற்றி? - அரசு பள்ளி மாணவனின் கவிதை

எது வெற்றி? - அரசு பள்ளி மாணவனின் கவிதை
     
               எது  வெற்றி?
வற்றாத நதியில் நீர்  சேர்வது
                   வெற்றி இல்லை!
வளைகின்ற மூங்கிலை வளைப்பதும்
                   வெற்றி இல்லை!
மதிப்பெண்களுடன் மதிப்புபெறுவதும் 
                   வெற்றி இல்லை!
செல்வத்தை கொண்டு உலகை வெல்வதும்
                    வெற்றி இல்லை!
எண்ணங்கலாள் உள்ளத்தை வெல்வதுதான்  வெற்றி
துயரத்தை விட்டு உயரத்தை அடைவதுதான் வெற்றி
வரலாற்று வரிகளில் இடம்பெறுவதுதான் வெற்றி
சரித்திரத்தில் சாதனை  புரிவதுதான் வெற்றி
விதைகளை வேறாக்கி தோல்விகளை உரமாக்கி வருவதுதான் வெற்றி
களைப்பை நீக்கி உழைப்பை உருவாக்கி வருவதுதான்
வெற்றி
                       ச.ஜெயபிரியன்,12ஆம் வகுப்பு


பெயர்;ச.ஜெயபிரியன்
வகுப்பு;12 ஆம் வகுப்பு
பள்ளி;இராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி
(அரசு உதவி பெறும் பள்ளி)
பள்ளியின் முகவரி;அண்ணாமலை நகர்,சிதம்பரம்-608 001,கடலூர்.
மாணவனின் முகவரி; 3/97சகஜானந்தா தெரு,           
குயவன் பேட்டை, சிதம்பரம்-608 001,கடலூர்.
கவிதையின் தலைப்பு;எது வெற்றி?
தொலைபேசி எண்;8300675239

Post Top Ad