கொரோனா ரூபாய் நோட்டால் பரவுமா?

கொரோனா ரூபாய் நோட்டால் பரவுமா?


கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவாது என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கிகள் சார்பில், ரூபாய் நோட்டுகளை கையாளும் நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டுகள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவாது. இதை, உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.


வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, ஏ.டி.எம்., மையங்களில் நிரப்பும் பணியில் ஈடுபடும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூபாய் நோட்டுகளால், வைரஸ் பரவாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive