மாநில அரசு அறிவிக்கும் வரை தளர்வுகள் இல்லை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 18, 2020

மாநில அரசு அறிவிக்கும் வரை தளர்வுகள் இல்லை!

மாநில அரசு அறிவிக்கும் வரை தளர்வுகள் இல்லை!

மத்திய அரசு 15.04.2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி 20.04.2020 க்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள் , வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது.

அந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் 20.04.2020 அன்று தெரிவிக்க உள்ளது.

இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுக்க உள்ளார்கள். எனவே , இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post Top Ad