சாய்வு நாற்காலியில் நீண்ட நேரம் அமர முடிகிறது. ஆனால் சாதாரண நாற்காலியில் அவ்வாறு முடிவதில்லையே ஏன்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 25, 2020

சாய்வு நாற்காலியில் நீண்ட நேரம் அமர முடிகிறது. ஆனால் சாதாரண நாற்காலியில் அவ்வாறு முடிவதில்லையே ஏன்?

சாய்வு நாற்காலியில் நீண்ட நேரம் அமர முடிகிறது. ஆனால் சாதாரண நாற்காலியில் அவ்வாறு முடிவதில்லையே ஏன்?

நிற்பதைக் காட்டிலும் உட்கார்ந்திருக்கும்போது களைப்பு குறைவாகவே ஏற்படும் , படுத்துக் கொண்டிருந்தால் அந்தக் களைப்பும் தோன்றாது தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் அமைந்துள்ள உயரம் குறையக் குறைய, நிலையாற்றலும் குறைகிறது. குறைந்த நிலையாற்றலில் , களைப்பு ஏற்படாத வகையில் நீண்ட நேரம் அந்நிலையில் இருக்க முடிகிறது.

சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ( ஈர்ப்பு மைய ) உயரம் அதிகமாக இருக்கும். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது உடலில் ( ஈர்ப்பு மைய ) உயரம் குறைவாக இருக்கும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும்போது , இடுப்பிற்கு மேலும் உடலின் எடை புட்டங்களை அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது , உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் , சாய்வு நாற்காலியில் அதிக நேரம் அமர முடிகிறது.

Post Top Ad