தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, April 7, 2020

தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்!

தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்!

குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் , ஊரடங்கு காரணமாக தேர்வு குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறிவித்துள்ளது .

இது தொடர்பாக , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
( டிஎன்பிஎஸ்சி ) இன்று ( ஏப் . 7 ) வெளியிட்ட அறிவிப்பில் ,

 " தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09 . 12 . 2019 நாளிட்ட அறிவிக்கை எண் 34 / 2019 இல் 25 . 04 . 2020 மற்றும் 26 . 04 . 2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த , தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் , குறு , சிறு
மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனத்தில் , உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது , கரோனா வைரஸ் பரவலால் கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad