கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா?
கருப்பையில் இருக்கும் இயல்பான குழந்தைக்கு காது கேட்கும். தாயின் குரலையும், தந்தையின் குரலையும் பிறந்தவுடன் எளிதாக உணர முடிகிறது. நிறைமாத கர்ப்பிணியின் அருகில் அதிக சத்தம் கேட்டால் ( தீபாவளியின்போது வெடி ஓசை எழுப்பினால்) கருப்பையிலுள்ள குழந்தை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது என்பது அனுபவ உண்மை.
கருவளர்ச்சியின்போது கருவின் மூன்றாவது வாரத்திலேயே காதின் மொட்டு உருவாக்கம் நடைபெறுகிறது. ஏழாவது வாரத்தில் புறச் செவி உருவாகிறது. மூன்று, நான்கு மாத கருவில் குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்துமே உருவாகி வளர்ச்சியடையத் தொடங்குகின்றன.