கால்நடைகள் குடையைக் கண்டவுடன் மிரள்வது ஏன்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, April 24, 2020

கால்நடைகள் குடையைக் கண்டவுடன் மிரள்வது ஏன்?

கால்நடைகள் குடையைக் கண்டவுடன் மிரள்வது ஏன்?

விலங்குகளின் நிறப் பார்வையைக் கண்டறிய பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பாலூட்டிகளில் மனிதன், மனிதக் குரங்குகள் , குரங்குகளைத் தவிர எந்த விலங்கிற்கும் நிறப் பார்வை இல்லை !

தேனீக்களுக்குச் சிவப்பு வண்ணத்தைத் தவிர மற்ற வண்ணங்களைக் கண்டறியும் திறன் உள்ளன. அவற்றுக்கு சிவப்பு வண்ணம் , பழுப்பு நிறமாக - கறுப்பு நிறமாகத் தெரிகின்றதாம்.

ஆனால் , தேனீக்கள் புற ஊதாக் கதிர்களைக் கண்டறியும் திறன் பெற்றுள்ளன! ( இப்பண்பு மனிதருக்கு இல்லை ). பறவைகளுக்கு , நிறப் பார்வை அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. பெண் பறவைகளைக் காட்டிலும் ஆண் பறவைகள் கண்ணைக் கவரும் பல வண்ணங்களைப் பெற்றுள்ளன.

இந்த வண்ணங்கள் தம் இனப் பெண் பறவைகளை , இனச் சேர்க்கைக்குக் கவர்ந்திழுக்க உதவுகிறது. பொதுவாக , விலங்குகளுக்கு நிறப் பார்வையைவிட மோப்ப சக்தி அதிகமாக உள்ளது.

இதற்குக் காரணம் , அந்த விலங்குகள் இரவில் வேட்டையாடும் முன்னோர்களிடமிருந்து வந்ததுதான் என்று கருதுகிறார்கள்.

கால்நடைகளுக்கு நிறப் பார்வை இல்லை! குடையைக் கண்டு மிரள்வது அதன் அசைவைப் பொறுத்துத்தான் என்று கூறலாம்.

Post Top Ad