100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் அடுத்த 3 மாத கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க திட்டம்.!!!முதல்வர் பழனிச்சாமி உத்தரவு.!!!

தற்போது கொரோனா ஊரடங்கால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பேருந்துகளும் இயங்காததால் வங்கி சென்று பணம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வங்கி அதிகாரிகள் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். நோய் குறையும் வரை அடுத்த 3 மாதத்திற்கு இதே நடைமுறை தொடரும் என அவர் தெரிவித்தார்.