அனைத்து தனியார் நிறுவனங்களும் இயங்கலாம் -தமிழக அரசு அனுமதி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, May 9, 2020

அனைத்து தனியார் நிறுவனங்களும் இயங்கலாம் -தமிழக அரசு அனுமதி

அனைத்து தனியார் நிறுவனங்களும் இயங்கலாம் -தமிழக அரசு அனுமதி
அனைத்து தனியார் நிறுவனங்களும் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.ஆனால் மே 3- ஆம் தேதிக்கு பிறகு 3 -ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.சில தளர்வுகள் மட்டும் இந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.இந்நிலையில் தான் தமிழக அரசு இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில்,வருகின்ற 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும்வரை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post Top Ad