வளைய சூரிய கிரகணம் - வானில் ஒரு அதிசய நிகழ்வு - வரும் 21-ம் தேதி நிகழ்கிறது - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, June 19, 2020

வளைய சூரிய கிரகணம் - வானில் ஒரு அதிசய நிகழ்வு - வரும் 21-ம் தேதி நிகழ்கிறது

வளைய சூரிய கிரகணம் - வானில் ஒரு அதிசய நிகழ்வு - வரும் 21-ம் தேதி நிகழ்கிறது





வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் வரும் 21-ம் தேதி நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணாலோ அல்லது தொலைநோக்கி மூலம் நேரடியாகவோ பார்க்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். 

சூரிய கிரகணம், ஜூன் 21ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. 

இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படும்.

ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால் சூரியன் வளையம் போன்று தோன்றும். இது "வளைய சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகிறது.

மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். இந்தியாவில் காலை 9:15 மணிக்கு தொடங்கி, மாலை 3:04 மணிக்கு முடிகிறது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். 

ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும். அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.


Post Top Ad