நாளை முதல் ஓட்டல்கள் செயல்பட அனுமதி: விதிமுறைகளை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தல்
![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/10/f8/d0/10f8d0fc6b57ce80088cd9af9ca6e70340b1b68f6e32aadfa9ffb06fc6a94eb1.jpg)
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சுவரொட்டிகளை, ஆங்காங்கே காட்சிப்படுத்த வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற, அளவான பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாகனம் நிறுத்துமிடத்தில் போதுமான இடைவெளி அவசியம். குடிநீர், கைகழுவும் இடம், கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை, பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். பணம் செலுத்துவதற்கு பதிலாக, டிஜிட்டல் முறையை ஊக்குவிக்க வேண்டும்.உணவுகொண்டு செல்லும் வாகனங்கள், கிருமிநாசினி கொண்டு முறையான கால இடைவெளியுடன் சுத்தம் செய்தல், பாத்திரங்களை சுடுநீரில் கழுவுதல், கைரேகை வருகை பதிவை தவிர்த்தல் பின்பற்ற வேண்டும்.
காய்கறியை சமைப்பதற்கு முன்பு, 50 பிபிஎம்., குளோரினேட் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.லிப்ட், கைப்பிடி, நாற்காலிகளை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களும் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். விதிமுறைகள் பின்பற்றாத ஓட்டல்களை, மூட நடவடிக்கை எடுக்கப்படும். உணவக செயல்பாடுகளை கண்காணிக்க, கள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.