விண்வெளியில் புதிய மர்மப் பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

விண்வெளியில் புதிய மர்மப் பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
விண்வெளியில் புதிய மர்ம பொருள் ஒன்றை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் புவிஈர்ப்பு சென்சார் அலைகளைப் பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.


இத்தாலியின் பைசா நகரில் உள்ள ஐரோப்பிய புவியீர்ப்பு ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய இரண்டு பொருட்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றில் ஒன்று கருந்துளையாகவும் மற்றொன்று சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

முதலில் கூறப்பட்டது கருந்துளை என்று நிச்சயமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது நம் சூரியனை விட 23 மடங்கு நிறை உடையது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது கூறப்பட்ட மர்மப்பொருள் சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது சூரியனைப் போல 2.6 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை இரண்டிற்கும் அதிக வேற்றுமை இருப்பதால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive