மாற்றுச்சான்றிதழ் இன்றி அரசு பள்ளியில் அனுமதி சேர்க்கை அறிமுகம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, June 7, 2020

மாற்றுச்சான்றிதழ் இன்றி அரசு பள்ளியில் அனுமதி சேர்க்கை அறிமுகம்

மாற்றுச்சான்றிதழ் இன்றி அரசு பள்ளியில் அனுமதி சேர்க்கை அறிமுகம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் மாற்றுச் சான்றிதழ் இன்றி அனுமதி சேர்க்கை முறையை கல்வி அலுவலர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் நடராஜன், மணிவாசகம் ஆகியோர் தனியார் பள்ளிகளின் நெருக்குதலால் குழந்தைகளின் கல்வி பாழாகும் என்பதால், அச்சமின்றி அரசு பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர் சேர்க்கை செய்ய புதிய விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தி, அந்த விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினால் அனுமதி சேர்க்கை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய முறை பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Post Top Ad