பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை(01.09.2020) முதல் மாணவர் சேர்க்கை!

பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை(01.09.2020) முதல் மாணவர் சேர்க்கை!









 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிநகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில்விண்ணப்பித்த மாணவர்கள்பலருக்கும் இடம் கிடைக்காததால், கூடுதலாக 200 இடங்கள்அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைமுதல் மாணவர்கள் சேர்க்கைநடக்கிறது.
காரைக்குடி ராமநாதன் செட்டியார்நகராட்சி பள்ளி 2013-2014-ம்கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது 6 ஆசிரியர்களும், 218 மாணவர்களும் இருந்தனர். தலைமைஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா முயற்சியால்தனியார் பள்ளிகளைப் போன்றுசீருடை, டை, ஷூ அணியும் முறைஇங்கு கொண்டு வரப்பட்டது. இதுபெற்றோரிடம் நல்ல வரவேற்பைபெற்றது.

2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கிலவழிக்கல்வி தொடங்கப்பட்டது. தரம்உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம்வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீததேர்ச்சியை இப்பள்ளி பெற்றுவருகிறது. இதனால் மாணவர்எண்ணிக்கையும் படிப் படியாகஉயர்ந்தது.

கடந்த ஆண்டே 1,325 மாணவர்கள்படித்தனர். கரோனா ஊரடங்கால்நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்சேர்க்கை ஆக.17-ம் தேதி நடந்தது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு 700 பேர் இடம் கேட்டு குவிந்தனர்.

இதனால் சில மணி நேரத்திலேயேமாணவர்கள் சேர்க்கை முடிந்ததால், பலரும் தங்களது குழந்தைகளுக்குஇடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன்திரும்பிச் சென்றனர்.

இதையடுத்து 6-ம் வகுப்பில் கூடுதலாக200 மாணவர்களை சேர்க்கவும், கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டவும் கல்வித்துறைஉத்தரவிட்டது. மேலும் இன்று முதல்அப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைநடக்கிறது.












0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive