ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா


கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாகநிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்தபின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால்கவனம் செலுத்த முடியும் என்கின்றனர்கல்வியாளர்கள்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் மே மாதஇறுதியில், பொதுமாறுதல் கலந்தாய்வுநடத்துவது வழக்கம்.ஜூன் இறுதிக்குள், பதவிஉயர்வு, பணியிட மாறுதல் பெற்றவர்கள், அந்தந்த புதிய பள்ளிகளுக்கு சென்றுபணியில் சேர வேண்டும்

ஊரடங்கு காரணமாக பள்ளிகள்மூடப்பட்டுள்ள இச்சூழலில், வரும் செப்., இறுதி வரை, மாணவர் சேர்க்கை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், கலந்தாய்வுநடத்துவது குறித்து எந்த அறிவிப்பும்வெளியிடப்படவில்லை.

மத்வராயபுரம், தொண்டாமுத்துார் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, குறிச்சி, தடாகம் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கிணறு உட்பட, 20க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல், பாடவாரியாக, 35 முதுகலைபட்டதாரி ஆசிரியர் இடங்களும் காலியாகஉள்ளன.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமாநில தணிக்கையாளர் அருளானந்தம்கூறியதாவது:மே மாதத்துக்கு பின், பணிஓய்வு பெற்றவர்களுக்கே, ஓராண்டு நீட்டித்துபணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வு பெற்றதலைமையாசிரியர், முதுகலை பட்டதாரிஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், சமீபத்தில்தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுகலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாகநடத்தப்பட்டது. அது போல், பிறமாவட்டங்களிலும், பதவி உயர்வு கலந்தாய்வுநடத்தலாம். பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல்பணிகளில் மட்டும், ஆசிரியர்கள் கவனம்செலுத்த,

இது வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கூறினார்.ஆன்லைன் வாயிலாக, சமூகஇடைவெளியை பின்பற்றி, பதவிஉயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவதுநடத்த வேண்டும்;

முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர்காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றிநடக்கும் என்கின்றனர்ஆசிரியர்கள்.கவனத்தில் கொள்ளுமா, நம்பள்ளிக்கல்வித்துறை?''சென்னைமாநகராட்சி சார்பில், சமீபத்தில்தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுகலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாகநடத்தப்பட்டது.

அது போல், பிற மாவட்டங்களிலும், பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்தலாம்.

 பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல் பணிகளில்மட்டும், ஆசிரியர்கள் கவனம் செலுத்த, இதுவசதியாக இருக்கும்,''ஆன்லைன் வாயிலாக, சமூக இடைவெளியை பின்பற்றி, பதவிஉயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவதுநடத்த வேண்டும்;

 முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர்காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive