மாநில நல்லாசிரியர் விருது வழங்கும்விழாவை செப்.,7ல் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டிற்கான விருது இன்று(செப்.,3) அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில்செப்.,5ல் முதல்வர், அமைச்சர்கள்முன்னிலையில் விழா நடப்பதுவழக்கம். இந்தாண்டு கொரோனாதொற்று காரணமாக சென்னையில் 10 ஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர்பழனிசாமி விருது வழங்கவுள்ளார்.
மற்றவர்களுக்கு அந்தந்தமாவட்டங்களில் அமைச்சர், கலெக்டர்முன்னிலையில்வழங்கப்படவுள்ளது.முன்னாள்ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிமறைவையடுத்து மத்திய அரசு ஒருவாரத்திற்கு துக்கம் அனுசரிக்கிறது. இதனால் செப்.,5க்கு பதில் 7ல் விழாநடத்த அரசு முடிவு செய்துஉள்ளது.
0 Comments:
Post a Comment