17 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு:


 சென்னை:வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், 17 மாவட்டங்களில், இன்று திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், தஞ்சாவூர்.நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய, 17 மாவட்டங்களில், சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும்.அந்தமானை ஒட்டிய கடற்பகுதியில், வரும், 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். எனவே, வங்க கடலில் உள்ள மீனவர்கள், ஆழ்கடல் பகுதிகளில் இருந்து, நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive