தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26, 27,28 ஆகிய மூன்று நாட்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது . இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி,
- தூத்துக்குடி,
- திருநெல்வேலி,
- தென்காசி,
- மதுரை,
- தேனி,
- திண்டுக்கல்,
- சிவகங்கை,
- ராமநாதபுரம்,
- விருதுநகர்,
- தஞ்சை,
- திருவாரூர்,
- நாகை
ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக
- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி,
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி
ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதற்கு காரணம் மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசம் அருகே கரையை கடந்தது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
0 Comments:
Post a Comment