அரசுப் பள்ளி ஆசிரியர் பணிநியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆகநிர்ணயம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. தேசிய ஆசிரியர்கல்விக் குழுமத்தின் விதிப்படி ஆசிரியர்தகுதித் தேர்வை எந்த வயதினரும்எழுதலாம் எனும்போது அதில் தேர்ச்சிபெற்றாலும் கூட அவர்கள் தமிழகத்தில்அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாதுஎன்பதுதான் குழப்பத்தின் உச்சம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புஅலுவலகம் வெளியிட்டுள்ளபுள்ளிவிவரங்களின்படி இடைநிலைஆசிரியர் பணிக்கு 1, 66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம்7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர்தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுஆசிரியர் பணிக்காகக்காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.
இன்னொரு பக்கம் 2013-ம் ஆண்டுநடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில்சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இவர்களில்பெரும்பாலானவர்கள் 40 வயதைக்கடந்தவர்கள்.
இன்னும் சில லட்சம் பேர் ஆசிரியர்பயிற்சி, பி.எட். படிப்பை முடித்துவிட்டுஅரசுப் பணிக்கான கனவுடன்காத்திருக்கின்றனர். இட ஒதுக்கீட்டுவகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகைவழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும்கடந்து ஆசிரியர் பணிக்குத் தகுதிபெற்றுள்ள லட்சக்கணக்கானோர்பாதிக்கப்படுவர்.
எனவே, இந்த வயது வரம்புநிர்ணயத்தை அரசு திரும்பப் பெறவேண்டும். அரசிதழில் இந்த உத்தரவுஇடம் பெற்ற நிலையில், அரசாணையைப் பிறப்பிக்கக் கூடாதுஎன்று கல்வியாளர்கள், ஆசிரியர்சங்கங்கள் குரல் கொடுக்கத்தொடங்கியுள்ளனர். இதுகுறித்துக்கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
இதனைதனி நபர் பிரச்சினையாகப்பார்க்காமல் சமூகப் பிரச்சினையாகஅணுகி, அரசு நல்லதொரு தீர்வைமுன்வைத்து சமூக நீதியை நிலைநாட்டவேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்மூர்த்தி கூறுகிறார்.
''பிளஸ் 2 முடித்து 30 வயதுக்குள்இருப்பவர்கள் ஆசிரியர் பயிற்சியில்சேரலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள்எந்த வயதிலும் பி.எட்.படிப்பில் சேரலாம்என்று தமிழக அரசு விதிகளைவகுத்துள்ளது. இன்னொரு பக்கம்ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வயதுவரம்பு தேவையில்லை என்று மத்தியஅரசு கூறுகிறது. இந்நிலையில், 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர்தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் அரசுப் பள்ளிஆசிரியர் ஆக முடியாது என்பதுமுரண்பாடாக இல்லையா?
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள், பி.எட். கல்லூரிகளில்படித்துவிட்டு ஆண்டுக்கு சுமார் 50,000 முதல் ஒரு லட்சத்துக்கும்மேலானவர்கள் வெளியேவருகின்றனர். ஆனால், இவர்கள்அத்தனை பேருக்கும் வேலைகிடைப்பதில்லை. உதாரணமாகஆண்டுக்கு 1000 பேரை ஆசிரியராகஅரசு பணி நியமனம் செய்கிறது எனஎடுத்துக்கொண்டால் அதைவிட 100 மடங்கு அதிகமானோர் படித்து முடித்துவெளியே வருகின்றனர். அப்படியென்றால் தேவைக்குஅதிகமாகவே நாம் ஆசிரியர்களைஉருவாக்கிவிட்டோம். அவர்களுக்கானவாய்ப்புக்கு என்னசெய்யப்போகிறோம்?
45 வயதுள்ள ஆசிரியர் நன்றாகப் பாடம்சொல்லிக்கொடுக்கமாட்டார் என்றுஅரசு நினைப்பதே தவறு. அந்தப்பார்வையை அரசு மாற்றிக்கொள்ளவேண்டும். ராணுவம், காவல்துறைபோன்றவற்றில் பணியாற்ற வயதுவரம்பு நிர்ணயிப்பது அவசியம். ஆசிரியர் பணிக்கு அவசியமில்லை. வயது ஆக ஆக, அனுபவம் கூடக்கூடகற்றல்திறன், பணித்திறன் மேம்படும். மாணவர்களுக்கு இலகுவாகக் கற்பிக்கமுடியும். அப்துல் கலாம், மயில்சாமிஅண்ணாதுரை போன்ற ஒப்புயர்வற்றவிஞ்ஞானிகள் பலபல்கலைக்கழகங்களில் வருகை தரும்சிறப்புப் பேராசிரியர்களாகப்பணியாற்றியுள்ளனர். வயதால், அறிவால், அனுபவத்தால்உயரும்போதுதான் அத்தகு பெருமைஅவர்களுக்குக் கிடைக்கிறது. மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ளநிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.
நல்லாசிரியர் விருது பெற குறைந்தது15 ஆண்டுகள் அனுபவம் அவசியம்என்பதே விருதுக்கான முதல் தகுதிஎனும்போது 40 வயதைக்கடந்தவர்களால் நன்றாகக் கற்பிக்கமுடியாது என்று சொல்வது சரியானவாதம் அல்ல.
ஆரம்பக் கல்வியிலிருந்து பி.எட்.படிப்புவரை மொத்தம் 19 ஆண்டுகளைக்கல்விக்காகச் செலவிட்டவர்கள், ஆசிரியர் பயிற்சிக்காக மொத்தம் 14 ஆண்டுகள் செலவிட்டவர்கள் எனதற்போது சுமார் 10 லட்சம் பேர். அவர்கள்அத்தனை பேரும் அரசுப் பள்ளிஆசிரியர் கனவுடன் உள்ளனர். அடித்தட்டு மக்கள் படித்த காலங்கள்வீண், செய்த செலவுகள் வீண் என்றுவிரக்தியடையும் நிலைக்கு அரசுஆளாக்கக் கூடாது. அவர்களின்எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக்கூடாது. கிட்டத்தட்ட 5லட்சம் பேராவதுவயது வரம்பு நிர்ணயத்தால்பாதிக்கப்படுவர். இதை தனிநபர்பிரச்சினையாகப் பார்க்காமல் 5 லட்சம்குடும்பங்களின் வாழ்வாதாரம்பாதிக்கப்படும் சமூகப் பிரச்சினையாகப்பார்க்க வேண்டும்.
சிலஆண்டுகள் மட்டுமே பணிசெய்தவருக்கு பென்ஷன் உள்ளிட்டபலன்களை அளிக்க வேண்டுமே என்றுஅரசு கணக்குப் பார்க்காமல், நிதிச்சிக்கனத்தை இதில் காட்டாமல்ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியேற்றவேண்டும். இப்படிச் செய்வதன் மூலமேஅரசு சமூக நீதியை நிலைநாட்டமுடியும்'' என்று தனது கருத்துகளைப்பகிர்ந்துகொண்டார் மூர்த்தி.
ஆசிரியர்கள் அப்டேட் ஆகவில்லைஎன்பதை பெரிய குறையாக, காரணமாகச் சொல்லிவிட முடியாது. அதற்கேற்ப பயிற்சிகள் மூலம் எளிதில்ஆசிரியர்களைத் தயார்படுத்திவிடமுடியும் என்று மூத்த கல்வியாளர்ச.சீ.ராஜகோபாலன் கூறுகிறார்.
''பள்ளிக் கல்வியில் 1990-ம் ஆண்டுவரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணிநியமனத்துக்குக் குறிப்பிட்ட வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் ஆசிரியர் சங்கங்களின்கோரிக்கையை ஏற்றுநியமனத்துக்கான வயது வரம்புநீக்கப்பட்டது. இதனால் 57 வயதுநிரம்பியவர்கள்கூட ஆசிரியர்களாகப்பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகுதற்போது வயது வரம்பு நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள்வேலைத்திறனை இழந்திருப்பார்கள்என்று அரசு நினைக்கக்கூடாது. வேலைஇல்லாமல் இருந்தாலும் ஆசிரியர்கள்கற்பித்தல் திறனைஇழந்திருக்கமாட்டார்கள். அவர்கள்பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில்தனியார் பள்ளிகளில் பணி செய்துகொண்டிருப்பவர்களே. அதனால்அவர்கள் திறமை மீது சந்தேகப்படவேண்டியதில்லை. அப்படியே கணிதம், புவியியல் உள்ளிட்ட கற்பித்தல்முறைகள் மாறியிருந்தாலும் குறுகியகாலப் பயிற்சி மூலம் ஆசிரியர்களைத்தயார்படுத்திவிட முடியும். எனவே வயதுவரம்பு நிர்ணயம் என்பதுதேவையற்றது. அரசு உடனே இதைத்திரும்பப் பெற வேண்டும்'' என்றுராஜகோபாலன் கருத்துத் தெரிவித்தார்.
அரசுஒரு கொள்கை முடிவைஎடுக்கும்போது, அரசிதழில் குறிப்பிடும்முன்பு கல்வியாளர்கள், ஆசிரியர்சங்கங்கள், ஆசிரியர் மன்றங்களிடம்கருத்துக் கேட்பது அவசியம் என்றுதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத் தலைவர்நா.சண்முகநாதன் வலியுறுத்துகிறார்.
மேலும் அவர் கூறும்போது, ''வேலைக்கு வரத் துடிக்கும்ஆசிரியர்களை, குறிப்பாகப்பெண்களை இந்த வயது வரம்புநிர்ணயம் அசைத்துப் பார்த்துள்ளது. தமிழகத்தில் பெண் கல்வியில்குறிப்பிடத்தக்க முன்னேற்றம்பெற்றுள்ளோம் என்றால் அதற்குக்காரணம் ஆசிரியர் பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகள்தான் என்பதைமறுக்கமுடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிகஅளவிலான பெண்கள் ஆசிரியர்பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகளைப்படித்தனர். குடும்பம், குழந்தைகள்என்று ஆன பிறகும் அவர்களால்ஆசிரியர் பயிற்சி, பி.எட். படிக்கமுடிந்தது. ஆனால், அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆவதற்கான வாய்ப்புதற்போது இல்லை.
இப்போது எங்களின்கோரிக்கையையாவது ஏற்று வயதுவரம்பு நிர்ணயத்தைத் திரும்பப் பெறவேண்டும். அப்படித் திரும்பப் பெற்றால்மட்டுமே பள்ளிக் கல்வித்துறை மீதுநம்பகத்தன்மை ஏற்படும்'' என்றார்.
மாணவர்கள் குறைவு, உபரிஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில்25% இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிஆசிரியர்கள் வயது வரம்பு எனஎல்லாவற்றுக்கும் ஒரு தொடர்புஇருக்கிறது என்கிறார் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அமைப்பின் மாநிலஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி.
''தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும்அதிக அளவிலான ஆசிரியர்களைநியமிப்பதில்லை. 2013 ஆம்ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்தஎண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில்ஆசிரியர்கள் உபரி நிலையில்இருக்கின்றனர் என்று கூறும் அரசுஅந்த ஆசிரியர்களை மாவட்டத்தில்உள்ள மற்ற பள்ளிகளுக்குக் கூட பணிநிரவல் செய்ய முடியாத நிலையில்உள்ளது. காரணம், அரசுப் பள்ளிகளில்மாணவர்களின் எண்ணிக்கைகுறைந்துகொண்டே செல்கிறது. தனியார் பள்ளிகளை நோக்கிமாணவர்கள் செல்கின்றனர். அதன்மீதான ஈர்ப்பே பெற்றோர்களுக்கும்மாணவர்களுக்கும் அதிக அளவில்இருக்கிறது.
சமீபத்தில் தமிழத்தின் ஏதேனும் ஒருமூலை முடுக்கிலாவது அரசுப்பள்ளியைத் திறந்ததாகக்கேள்விப்பட்டதுண்டா? ஆனால், தனியார் பள்ளிகள் நூற்றுக்கணக்கில்தொடங்கப்பட்டுள்ளன. அதனால்தான்அரசுப் பள்ளிகள் இணைப்பு, அரசுப்பள்ளிகள் மூடல், அரசுப் பள்ளிகளைநூலகமாக மாற்றுவது என அரசுதிட்டமிடுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசுகொண்டு வந்த இலவச கட்டாயக் கல்விஉரிமைச் சட்டத்தின்படி தனியார்பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்தபிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடுவழங்கப் பட வேண்டும். இதற்கு ஆகும்செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டகல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்டதனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசுவழங்கிவிடும். இந்த இலவசக்கல்விக்காக நிதி ஒதுக்கும் அரசு, அதேநிதியை அரசுப் பள்ளிகளின்உட்கட்டமைப்புக்குப் பயன்படுத்தினால்அரசுப் பள்ளிகள் மேம்படும்.
ஒருகிலோ மீட்டருக்குள்தொடக்கப்பள்ளி, 3 கி.மீ.க்குள்நடுநிலைப்பள்ளி, 7 கி.மீ.க்குள்மேல்நிலைப்பள்ளி எனத் தமிழகம்முழுவதும் மொத்தம் 45 ஆயிரம் அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்உள்ளன. தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர்பள்ளிகள் இருக்கின்றன. தலைமைஆசிரியர் உட்பட இரண்டே ஆசிரியர்கள்5 ஆம் வகுப்பு வரை உள்ள 23 பாடங்களை நடத்துவது சாதாரணவிஷயம் இல்லை. வகுப்புக்கு ஒருஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர்என்று நியமிக்கப்படும்போது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிகம்தேவைப்படுவர். அப்போது வயது வரம்புநிர்ணயத்துக்கு அவசியம் இருக்காது.
இப்போது ஊரடங்கு காலகட்டத்தில்மட்டும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளைநோக்கி வருகின்றனர். இந்நிலையில்மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள அரசுப் பள்ளிகளைமேம்படுத்த வேண்டும்'' என்கிறார் உமாமகேஸ்வரி.
அரசிதழில் இடம்பெற்றிருப்பதோடுவயது வரம்பு நிர்ணய விவகாரத்தைதமிழக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். அதனை அரசாணையாகமாற்றக்கூடாது என்பதே பெரும்பாலானஆசிரியர்களின் எதிர்பார்ப்பாகஉள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும்இதற்கான உரிய விளக்கத்தைக் கூறிமாநில அளவிலான வயது வரம்புநிர்ணயம் குறித்த குழப்பத்தைத் தீர்க்கவேண்டும். அரசு செய்யும் எனநம்புவோம்!
க.நாகப்பன்,
தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in.