ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு-அநீதி : உடனடியாக நீக்க வேண்டும்!




தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிநியமனத்திற்கு வயது வரம்புநிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி   40 வயதைகடந்தவர்களுக்குஇனி ஆசிரியர் பணி வழங்கப்படாதுஎன்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர்பணி கனவை கலைக்கும் இந்தஅறிவிப்பு மிகவும் அநீதியானது.

தமிழக அரசின் இந்த ஆணையைஎந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின்பெரும்பான்மையான மாநிலங்களில்வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரேபணி ஆசிரியர் பணி மட்டும் தான். ஒருவர் ஓராண்டு பணி நிறைவுசெய்யும் தகுதியை பெற்றிருக்கவேண்டும் என்பது தான் கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும்ஒரே நிபந்தனை ஆகும். அதன்படிஆசிரியர் பணிக்கு தகுதிபெற்ற ஒருவர்அவரது 57-ஆவது வயதில் கூடபணியில் சேர முடியும். தமிழ்நாட்டில்ஓய்வு பெறும் வயது 59-ஆகஅதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கானவயது 58-ஆக உயர்த்தப்பட்டிருக்கவேண்டும். மாறாக 40-ஆககுறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்குதேவையான குறைந்தபட்சக் கல்விபெற்றவர்கள் 7.12 லட்சம் பேர் ஆவர். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புஅலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இடைநிலை ஆசிரியர்பணிக்கு 1,66,543 பேர், பட்டதாரிஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர்பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர  இன்னும் சில லட்சம் பேர் பதிவுசெய்வதற்காக காத்திருக்கின்றனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர்தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுஆசிரியர் பணிக்காககாத்திருக்கின்றனர். இவர்களில்  40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள். இட ஒதுக்கீட்டுவகுப்பினருக்கு  வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகைவழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும்கடந்து ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்றுள்ள லட்சக்கணக்கானோர்பாதிக்கப்படுவர். அதற்கு அரசுகாரணமாக இருக்கக் கூடாது.

மத்திய அரசின் சார்பிலும், தமிழ்நாடுஉள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பிலும்நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில்பங்கேற்பதற்கு வயது வரம்பு எதுவும்நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதித் தேர்வுஎழுதலாம்; ஆனால், அதில் அவர்தேர்ச்சி பெற்றாலும் கூட ஆசிரியர் ஆகமுடியாது என்பது முரண்பாடுகளின்உச்சம் அல்லவா? தமிழ்நாட்டில்2013&ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 80,000 பேர் தேர்ச்சிபெற்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர்பணி நியமனம் நடைபெறாதநிலையில், அவர்களால் பணியில் சேரமுடியவில்லை. அதற்குள் அவர்களின் 7 ஆண்டு தகுதிக்காலம் முடிவடைந்துவிட்டது. இப்போது அவர்கள் மீண்டும்தகுதித்தேர்வு எழுதி தான் ஆசிரியர்பணிக்கு தகுதி பெற முடியும் என்றுஅரசு அறிவித்து விட்டது. அவர்களில்பெரும்பான்மையினர் 40 வயதைக்கடந்தவர்கள் எனும் நிலையில், அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதிதேர்ச்சி பெற்றாலும் கூட அவர்களால்ஆசிரியர் பணியில் சேர முடியாது. அவர்கள் எந்தத் தவறும் செய்யாதநிலையில், கொள்கை முடிவு என்றபெயரில் அவர்களை தண்டிப்பதுஎவ்வகையில் நியாயம்?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 7500 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட12,000 ஆசிரியர் பணியிடங்கள்காலியாக இருப்பதாக பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன்அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த சிலஆண்டுகளுக்கு ஆசிரியர் நியமனம்இருக்காது எனும் நிலையில், இப்போது35 வயதைக் கடந்த எவருக்கும் இனிஆசிரியர் பணி கிடைக்காது. ஆண்டுதோறும் தொடர்ச்சியாகஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாதநிலையில், ஆசிரியர் பணிநியமனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம்செய்வது சமூகநீதிக்கு எதிரான செயல்ஆகும்.

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பைநீக்குவது எந்த வகையிலும் தகுதிகுறைவு இல்லை. ஒருவர்  50 வயதில்ஆசிரியர் பணியில் சேருகிறார்என்றால், அதுவரை அவர் பணியில்இல்லாமல் இருந்தார் என்று பொருள்அல்ல. மாறாக, அதுவரை அவர்குறைந்த ஊதியத்தில் தனியார்பள்ளியில் பணியாற்றி வந்திருப்பார். அப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்குகூடுதல் தகுதியாக  இருக்குமே தவிர, தகுதிக் குறைவாக இருக்காது. இவற்றையெல்லாம் கடந்து ஆசிரியர்பணிக்கு வயது வரம்பு இல்லை என்றுகடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தநடைமுறையை இப்போது அவசரஅவசரமாக மாற்ற வேண்டிய தேவைஎதுவும் இல்லை. இதை தமிழக அரசுஉணர வேண்டும்.

அரசுபள்ளி ஆசிரியர் பணிநியமனத்திற்கு 40 வயது உச்சவரம்புஎன்ற தமிழக அரசின் ஆணைசெயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில்லட்சக்கணக்கான இளைஞர்களில்ஆசிரியர் பணி கனவு சிதைக்கப் படும். எனவே, ஆசிரியர் பணி நியமனத்திற்குவயது வரம்பு நிர்ணயிக்கும்அரசாணையை திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும்என்று அரசு அறிவிக்க வேண்டும் எனவலியுறுத்துகிறேன்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive