குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளஆண் அரசு ஊழியர்களுக்கும்ஊதியத்துடன் கூடிய விடுப்புவழங்கப்படும் என்று மத்தியபணியாளர் மற்றும் பயிற்சித்துறைஅமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ஆனால், விடுப்பு எடுக்கும் ஆண் அரசுஊழியர், மனைவியை விட்டுப்பிரிந்தவராகவோ, அல்லது மனைவிஇல்லாத நிலையிலோ அல்லதுமாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளாகவோஇருந்தால் மட்டுமே விடுப்புஅளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுபோன்ற சூழலில் குழந்தையைக்கவனித்துக்கொள்ள வீட்டில் குடும்பஉறுப்பினர் இல்லாத நிலையில்குழந்தைகள் கவனிப்பு விடுமுறை(சிசிஎல்) எடுக்கலாம்.

இதுகுறித்து மத்திய அமைச்சர்ஜிதேந்திர சிங் நேற்று நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:

 ''பிரதமர் மோடியின் தலைமையிலானஅரசில் மத்திய பணியாளர் மற்றும்பயிற்சித்துறையில் சிலசீர்திருத்தங்கள்கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, இனி மேல் குழந்தைகளைக்கவனித்துக்கொள்ள ஆண் அரசுஊழியர்களும் ஊதியத்துடன் கூடியவிடுப்பு (சைல்ட் கேர் லீவ் - சிசிஎல்) எடுக்கலாம்.

ஆனால், விடுப்பு எடுக்கும் அந்தஊழியர் மனைவியை விட்டுப்பிரிந்தவராகவோ அல்லது மனைவியைஇழந்தவராகவோ அல்லது திருமணம்ஆகாதவராகவோ இருக்க வேண்டும். அதாவது தந்தை மட்டுமே அந்தக்குழந்தைக்கு இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள்மாற்றுத்திறனாளியாகவோ அல்லதுசிறப்புக் குழந்தைகளாகவோஇருந்தாலும் சிசிஎல் எடுக்கலாம்.

இந்தமுடிவு பல மாதங்களுக்கு முன்பேஎடுக்கப்பட்டாலும், அதிகமான ஈர்ப்பைமக்கள் மத்தியில், அரசு ஊழியர்கள்மத்தியில் பெறவில்லை. சிசிஎல்விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்கள்தங்கள் விடுப்பு குறித்தும் பணியாற்றும்துறையின் தலைமை அலுவலகத்தில்முன்கூட்டியே தகவல் தெரிவித்து முன்அனுமதி பெற வேண்டும்.

குழந்தையைக் கவனித்துக்கொள்ளஅரசு ஊழியருக்கு முதல் 365 நாட்கள்முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பும், 2-வது ஆண்டில் 80 சதவீத ஊதியத்துடன்கூடிய விடுப்பும் வழங்கப்படும். மேலும், சிசிஎல் விடுப்பில் ஒரு ஊழியர்இருக்கும்போது எல்டிசி விடுப்பு பெறமுடியும்.

 அதிலும் குழந்தைமாற்றுத்திறனாளியாக இருந்தால், அந்தக் குழந்தைக்கு 22 ஆண்டுகள்வரை எந்த வயதில் அந்தக் குழந்தைஇருக்கும்போதும் தேவைப்படும்போதும்விடுப்பு எடுக்கலாம்.

 பிரதமர் மோடியின் தனிப்பட்டஅக்கறை, தலையீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாளர் மற்றும்பயிற்சித்துறையில் பல்வேறுசீர்திருத்தங்கள், மாற்றங்கள் முடிவுகள்எடுக்கப்பட்டு வருகின்றன.

 இந்த முடிவு என்பது ஒரு அரசு ஊழியர்தன்னுடைய அதிகபட்ச, முழுத்திறனையும் வெளிப்படுத்திபணியாற்ற வேண்டும் என்றநோக்கத்தில் எடுக்கப்பட்டது. அதேசமயம், அரசு ஊழியர்கள்பணியாற்றாமல் இருத்தல், கையூட்டுபோன்ற குற்றங்களில் மத்திய அரசுசமரசம் செய்து கொள்ளாது''.இவ்வாறுஜிதேந்திர சிங் தெரிவித்தார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive