சட்ட படிப்புக்கு நாளை கவுன்சிலிங்


 

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, நாளை, 'ஆன்லைன் கவுன்சிலிங்' துவங்குகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், சட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. 


இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், தகுதியான மாணவர்களுக்கு, நாளை முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, பல்கலையின் பொறுப்பு பதிவாளர் ஆபிரஹாம் அறிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம், கவுன்சிலிங்கை, நாளை துவக்கி வைக்க உள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive