25.11.2020 அன்று அறிவித்துள்ள நிவர் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ( பேரிடர் காயங்களில் ) பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்காக உள்ளூர் பிரமுகர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் , எஸ்.எம்.சி பொறுப்பாளர்கள் , மராட்சி மன்றத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கேட்கும் போது உடனடியாக வழங்குவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை உள்ளூர் பிரமுகர்கள் அல்லது உள்ளூர் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரிடம் ஒப்படைத்து வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , பேரிடர் காலங்களில் மக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதியான குடிநீர் வாதி ( குடிநீர் தொட்டியினை நிரப்பிவைத்தல் ) , கழிவறைகள் ( சுத்தம் செய்தல் ) போன்றவற்றினை தயார் நிலையில் வைத்திடவும் , துப்புரவு பணியாளர்களைக்கொண்டு பள்ளியினை தூய்மைப்படுத்திடவும் தெரிவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் தேவை ஏற்படின் NSS மாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது - CEO திருவண்ணாமலை மாவட்டம்.
0 Comments:
Post a Comment