போலிகல்வி சான்றிதழ் கொடுத்துபணி : பள்ளிகளில் விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ஊழியர்கள் பலர் பணியில்சேர்ந்தபோது கொடுத்த கல்விசான்றிதழ் உண்மைதானா எனசம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோயில்நிர்வாகம் விசாரணை நடத்திவருகிறது.
இக்கோயிலில் சில ஆண்டுகளுக்குமுன் சேவுகர் உள்ளிட்டபணியிடங்களுக்கு ஆட்கள்நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கியகல்விச்சான்றிதழ் அடிப்படையில்பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இதில் சேவுகர் காமாட்சி என்பவர்கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ்போலியானது என கோயில் நிர்வாகஅதிகாரி செல்லத்துரைக்கு கடிதம்வந்தது.
விசாரணையில் உண்மை எனத்தெரியவந்ததை தொடர்ந்து அவர்'சஸ்பெண்ட்' செய்ய பட்டார். இதேபோல்சிலரும் பணியில் சேர்ந்திருப்பதுவிசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காமாட்சியுடன் பணியில்சேர்ந்தவர்களின்கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்யஉத்தரவிடப் பட்டது. முதற்கட்டமாகபள்ளி சான்றிதழ் உண்மைதானா எனசம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேட்டுகோயில் நிர்வாகம் கடிதம்எழுதியுள்ளது.
இணைகமிஷனர் செல்லத்துரைகூறுகையில், ''பள்ளி நிர்வாகங்கள்அளிக்கும் பதிலை பொறுத்துநடவடிக்கை இருக்கும்'' என்றார்
0 Comments:
Post a Comment