Flash News: தமிழக தேர்தலில் புதிய மாற்றம்?. அடுத்த பரபரப்பு.!!!


தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி www.ban-evm. site என்ற இணையதளத்தை இதுவரை ஒரு லட்சம் பேர் கையெழுத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் முறைகேடு நடப்பதாக கூறி இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive