10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை


 வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள OFFICE ATTENDANTS  பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: OFFICE ATTENDANTS

காலியிடங்கள்: 841

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in. என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 ஏப்ரல் 9, 10 தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2021





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive