பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வுக்கு மே 24 முதல் விண்ணப்பம் - அண்ணா பல்கலைக்கழகம்


பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு எழுத விரும்புவோர் வருகிற 24 - ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக செமஸ்டர் தேர்வு, கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் ஆன்லைனில் நடைபெற்றது. இந்த தேர்வில் பெரும் பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதனால் மறு தேர்வு நடத்தப்படுமென கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மட்டும் மறு தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் என்றும்,ஏற்கனவே விண்ணப்பித்திருந்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive