+2 மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வுத்துறை வெளியீடு.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் மாணவர்கள், மாணவிகளை தனித்தனியாக வாட்ஸ்அப் குழுவில் இணைத்து தேர்வுக்கான கேள்வித் தாள்களை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தனி தாள்களில் எழுதி Pdf கோப்பாக ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும். அதனை ஆசிரியர் சேகரித்து மதிப்பெண் வழங்க வேண்டும்.