SBI வங்கி கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒரு சூப்பர் அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அப்படி என்ன அறிவிப்பு?



SBI வங்கிகொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒருசூப்பர் அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அப்படிஎன்ன அறிவிப்பு?

இதனால்வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் வாருங்கள்பார்க்கலாம்.

பொதுவாகநாம் வங்கிகளில் தொடங்கிய சேமிப்பு கணக்கில், கணக்கு தொடங்கிய கிளையில்பணம் எடுத்தும் கொள்ளும் வசதி உண்டு. அதே


வங்கி வாடிக்கையாளர் வேறு கிளைகளில் பணம்எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு பணமும் குறைவாகத் தான்எடுக்க முடியும்.

உச்ச வரம்பு அதிகரிப்பு ஆனால்கொரோனா காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்டேட் பாங்க் ஆப்இந்தியா (SBI) ஒரு சூப்பர் அறிவிப்பினைகொடுத்துள்ளது எனலாம்.

 அது நீங்கள் கணக்குதொடங்கிய கிளை தவிர மற்றகிளைகளிலும் பணம் எடுக்கும் உச்சவரம்பினை அதிகரித்துள்ளது தான் அந்த அறிவிப்பு.

கொரோனாகாலத்தில் பயனுள்ள அறிவிப்பு ஏனெனில்இன்றைய


காலகட்டத்தில் பலரும் கணக்கு தொடங்கியதுஒரு இடத்தில் என்றாலும், அவர்கள் வெளியூர்களில், வெளிமாநிலங்களில் வசிக்கலாம். ஆக அவர்களால் இந்தகொரோனா காலகட்டத்தில் அடிக்கடி வங்கி கிளைக்கு செல்லவும்முடியாது.

இப்படியானவர்களுக்குஎஸ்பிஐயின் இந்த அறிவிப்பு மிகபயனுள்ளதாகவே இருக்கும். செல்ப்செக் மூலம் ரூ. 1 லட்சம்எடுக்கலாம் இது கொரோனா காலத்தில்வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் விதமாக, எஸ்பிஐ செக்அல்லது பணம் எடுக்கும் படிவம்மூலம் திரும்ப பெறும் உச்சவரம்பினை அதிகரித்துள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியானது எஸ்பிஐ, செல்ப் செக்


போட்டு எடுக்கும் தொகை வரம்பினை, ஒருநாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. வித்ட்ராவல் பார்ம் மூலம் எவ்வளவு? இதே மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல்பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு25,000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம்.

இதே மூன்றாம் தரப்பு நபர் செக்மூலமாக பணம் எடுக்கும் வரம்ப்பானது50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பார்ம்மூலமாக மூன்றாம் தரப்பினர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக


மூன்றாம் தரப்பினரின் கே ஒய் சிவிவரங்கள் தரப்பட வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதுவரையில் அமல்

 எஸ்பிஐயின் இந்த அதிரடி மாற்றங்கள்செம்டம்பர் 30, 2021 வரையில் அமலில் இருக்கும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில்எஸ்பிஐ-யின் நிகரலாபம் 80.15% அதிகரித்து, 6,451 கோடி ரூபாயாக


அதிகரித்துள்ளது. இதுவட்டி வருவாய் அதிகரித்த நிலையில்கண்டுள்ளது. வருவாய் அதிகரித்துள்ள நிலையில்மோசமான கடன் விகிதங்களும் குறைந்துள்ளது.










0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive