தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!


தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்குள் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு போன்றவைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் சங்கம் :

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏற்க்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்தாண்டு களில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியும் மற்றொரு புறம் பள்ளிகள் திறப்பதற்குள் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு போன்றவைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை அரசுக்கு கோரிக்கை வைத்து விடுத்துள்ளனர். மேலும் அனைத்து பள்ளிகளிலும் இரவு காவலர்களை அமர்த்தி கண்காணிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்திற்கு தனி கல்வி கொள்கையை உருவாக்கி கல்வியை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை இந்த விடுமுறை காலத்திலேயே செய்து முடிக்க வேண்டும். தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இலவசமாக்கப்பட வேண்டும். அனைவரும் கல்வி கற்கும் வகையில் பாட திட்டங்களை எளிமையாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive