தமிழகத்தில் செப். 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை!


 


தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். சென்னையில் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவது , பள்ளிகள் திறப்பு நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.


செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பஞ்சாப், பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே செப். 1 முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive