தொலைதூரக் கல்வி - ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல : உயர்நீதிமன்றம்

  

தொலைதூரக் கல்வி முறையில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு கோரி இடைநிலை ஆசிரியை நித்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சில ஆசிரியர்கள் கல்லூரிக்கு சென்று படிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

கல்லூரியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் படித்தவர்களை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

3 மாதங்களில் மறுஆய்வு செய்ய பள்ளிக்கல்வி , உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive