படிக்கும்போதே வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 2, 2025

படிக்கும்போதே வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம்

1345452

பாலிடெக்​னிக் படிக்​கும் மாணவர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை அதிகரிக்​கும் வகையில் ஓராண்டு கால தொழில்​ப​யிற்சி திட்டத்தை தொழில்​நுட்பக் கல்வி இயக்​ககம் அறிமுகப்​படுத்தி உள்ளது.

தமிழகத்​தில் 10-ம் வகுப்பு முடிக்​கும் மாணவர்​களில் கணிச​மானோர் பாலிடெக்​னிக் கல்லூரி​களில் 3 ஆண்டு கால பொறி​யியல் டிப்ளமோ படிப்​பில் சேரு​கிறார்​கள். அதேபோல், பிளஸ் 2 முடிக்​கும் மாணவர்கள் ‘லேட்ரல் என்ட்ரி’ முறை​யில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்த்​துக் கொள்​ளப்​படு​கிறார்​கள். அரசு பாலிடெக்​னிக், அரசு உதவி​பெறும் பாலிடெக்​னிக், தனியார் சுயநிதி பாலிடெக்​னிக் என 450-க்​கும் மேற்​பட்ட பாலிடெக்​னிக் கல்லூரி​கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டு​தோறும் ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் பயில்​கின்​றனர்.


ஓரு காலத்​தில் பாலிடெக்​னிக் டிப்ளமோ படிப்​பில் சேர இடம் கிடைப்பது கடினமாக இருந்து வந்த நிலை​யில், அண்மைக் காலமாக பாலிடெக்​னிக் கல்லூரியில் சேரும் மாணவர்​களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கல்லூரி​யிலும் சிவில், மெக்​கானிக்​கல், எலெக்ட்​ரிக்கல் மற்றும் எலெக்ட்​ரானிக்ஸ், எலெக்ட்​ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என பல்வேறு பாடப்​பிரிவு​களில் சுமார் 300 இடங்கள் இருந்​தா​லும் அதில் 50 சதவீத இடங்களே நிரம்​பு​கின்றன.

இந்நிலை​யில், பாலிடெக்​னிக் டிப்ளமோ படிக்​கும் மாணவர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை அதிகரிக்​க​வும், இன்றைய தொழில் நிறு​வனங்கள் எதிர்​பார்க்​கும் திறமை உடைய​வர்​களாக அவர் களை உருவாக்​கும் நோக்​கிலும் தொழில்​நுட்ப கல்வி இயக்​ககம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்​கொண்டு வருகிறது. அந்த வகையில், பாலிடெக்​னிக் பயிலும் மாணவர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை மேம்​படுத்த ஓராண்டு கால தொழில்​ப​யிற்சி திட்​டத்தை (Industrial Training Program) நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்​படுத்​தி​யுள்​ளது.


இத்திட்​டத்​தின்​படி, 3 ஆண்டு கால படிப்​பில் மாணவர்கள் கடைசி ஓராண்டு ஏதேனும் ஒரு தொழில்​ப​யிற்சி மையத்​தில் நேரடி பயிற்சி பெறு​வார்​கள். அந்த மையம் தொழில்​நுட்பக் கல்வி இயக்​ககத்​தின் அனுமதி பெற்​றதாக இருக்​கும். முதல் இரண்டு ஆண்டுகள் பாலிடெக்​னிக் கல்லூரி​யில் படித்து அங்கு தற்போதைய முறை​யில் தேர்​வெழுது​வார்​கள்.

3-ம் ஆண்டு முழு​வதும் கல்லூரிக்கு வெளியே குறிப்​பிட்ட தொழில்​ப​யிற்சி மையத்​தில் பயிற்சி பெறு​வார்​கள். அவர்​களுக்கு சம்பந்​தப்​பட்ட பொறி​யியல் பாடத்​தில் தியரி​யுடன் செயல்​முறை திறன், தகவல் தொடர்​புத்​திறன், நேரடி தொழில்​ப​யிற்சி போன்ற​வற்றுக்கு அதிக முக்​கி​யத்துவம் தரப்​படும்.

அந்த மையத்​தில் மாணவர்​களுக்கு இரண்டு செமஸ்டர் தேர்​வுகள் (அக்​டோபர் மற்றும் ஏப்ரல்) நடத்​தப்​பட்டு குறிப்​பிட்ட மதிப்​பெண் (கிரெடிட்) வழங்​கப்​படும். மதிப்​பெண் விவரங்கள் மாணவர்கள் படித்து வந்த பாலிடெக்​னிக் கல்லூரி​யில் சமர்ப்​பிக்​கப்​படும். 3 ஆண்டு மதிப்​பெண் அடிப்​படையில் பொறி​யியல் டிப்ளமோ வழங்​கப்​படும்​. இந்த புதிய திட்​டத்​தில் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே சேர்த்​துக்​கொள்​ளப்​படு​வர். இத்திட்​டத்​தில் சேர விருப்பம் தெரி​வித்த மாணவர்கள் அதன்​பிறகு பழைய முறைக்கு மாறிக்​கொள்ள முடி​யாது.

இத்திட்​டத்​துக்கான வரைவு வழிகாட்டு நெறி​முறைகளை தொழில்​நுட்​பக்​கல்வி இயக்​ககம் இணையதளத்​தில் வெளி​யிட்டு இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்​களின் கருத்து​களை​யும், ஆலோசனை​களை​யும் கேட்டுப்​பெற்றுள்​ளது. இந்த ஓராண்டு கால தொழில்​ப​யிற்சி திட்டம் குறித்து நடப்பு கல்வி ஆண்​டில் (2024-2025) சேர்ந்​துள்ள ​மாணவர்​களுக்கு ​விழிப்பு​ணர்வு ஏற்​படுத்​து​மாறு அனைத்து பாலிடெக்​னிக் கல்லூரிகளின் ​முதல்​வர்​களுக்கு ​மாநில தொழில்​நுட்​பக்​கல்வி ஆணை​யர் டி.ஆபிரகாம்​ அறிவுரை வழங்​கியுள்ளார்.


Post Top Ad